Sunday, November 6, 2016

குனூத் குறித்து அன்பருக்கு ஓர் கடிதம்

لمداومة عليه في صلاة الفجر، وهو خلاف قديم من عهد الصحابة والتابعين والفقهاء من بعدهم، ولذا فلا ينبغي وصف المداومة عليه في الفجر بأنها ممنوعة لأنها محل خلاف قوي كما مر، ففي سنن الترمذي عن البراء بن عازب: أن النبي صلى الله عليه وسلم كان يقنت في صلاة الصبح والمغرب قال: وفي الباب عن علي وأنس وأبي هريرة وابن عباس وخفاف بن إيماء بن رحضة الغفاري قال أبو عيسى حديث البراء حديث حسن صحيح واختلف أهل العلم في القنوت في صلاة الفجر فرأى بعض أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم القنوت في صلاة الفجر وهو قول مالك والشافعيوقال أحمد وإسحاق لا يقنت في الفجر إلا عند نازلة تنزل بالمسلمين فإذا نزلت نازلة فللإمام أن يدعو لجيوش المسلمين اهـ. والحديث صحيح كما ذكر الألباني وغيره.

அஸ்ஸலாமு அலைக்கும் !
        அன்சாரி காக்கா,
             நீங்கள் பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதுவது குறித்து கேட்டிருந்தீர்கள், அது சம்பந்தமாக எதிர் கருத்துள்ளவர்களின் நீண்ட விளக்கத்தையும் அனுப்பி இருந்தீர்கள் .
         இங்கே நான் என்னுடைய சில பணிவான கருத்துக்களை உங்களுடன் பகிர்கின்றேன் , அது உங்களை திருப்தி படுத்தும் , அல்லது குறைந்த பட்சம் இது குறித்து ஒரு நடுநிலையான சிந்தனையையாவது உங்களுக்குள் ஏற்படுத்தும் என நம்புகிறேன் .
        1) சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா , கூடாதா ?
என்பது பற்றி  இப்போது உட்கார்ந்து ஆய்வு செய்து கொண்டிருப்பதற்கு இது ஒன்றும் நவீன பிரச்சினை கிடையாது .  பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதற்கான ஆய்வுகளும் ,விவாதங்களும் நடந்து  தீர்மானிக்கப்பட்டு முடிந்து  போன விஷயம் , அவ்வாறான விவாதத்தின் முடிவை பார் போற்றும் இஸ்லாமிய பேரறிஞர் இமாம் திர்மிதீ (ரஹ்) தமது நூலில் இவ்வாறு கூறுகிறார்.
     " சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுவது குறித்து அலி(ரலி) ,  அனஸ்  (ரலி) ,  அபூஹுரைரா (ரலி) , இப்னு அப்பாஸ்   (ரலி) , க ஃபாப் இப்னு ஈமாஃ (ரலி) ஆகிய நபித்தோழர்களிடமிருந்து பல அறிவிப்புகள் கிடைக்கின்றன,இருப்பினும் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுவது குறித்து அறிஞர்களுக்கிடையே அபிப்பிராய பேதம் நிலவுகிறது, நபித்தோழர்கள் உட்பட சில அறிஞர்கள் சுப்ஹிலே குனூத் உண்டு என்கிறார்கள் , இமாம் மாலிக் (ரஹ்),இமாம் ஷாபியீ (ரஹ்) ஆகியோரின் கருத்து இதை தழுவியே உள்ளது,
           வேறு சில அறிஞர்கள்  சோதனையின் போது ஓதும் குனூத் தவிர்த்து வேறு எந்த குனூத்தும் இல்லை  என்கிறார்கள் , இமாம் அஹ்மது (ரஹ்) , இமாம் இஸ்ஹாக் (ரஹ் ) உடைய கருத்தும் இதுவே"
      அதாவது இதில் ஏதேனும் ஒரு கருத்தில் இருந்து கொண்டு எதிர் கருத்தினரை குறை சொல்லிக் கொண்டிருக்க தேவை இல்லை, இரு கருத்துக்கும் இதில் நியாயமுண்டு என்பதையே இந்த வாரத்தையில் கூற வருகிறார்கள்,  குனூத் குறித்த சர்ச்சையில் சமுதாயம் நடந்து கொள்ள வேண்டிய போக்கினை இதை விட அழகாக யாரும் கூறிட முடியாது.
      2) ஹதீஸ் மூன்று விதம்.
                          1, ஸஹீஹ் ( குறைகளற்றது )
                          2, ளயீப் ( பழகீனமானது )
                          3, மவ்ளூவ் ( இட்டுக்கப்பட்டது, பொய்யானது )
குனூத் குறித்து வந்துள்ள அறிவிப்புகள் ஸஹீஹானதாக என்னவோ இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவை பொய்யான தகவலோ,இட்டுக்கட்டப்பட்ட. செய்தியோ அல்ல என்பது மட்டும் உறுதி.
         ஹதீஸ் கலை வல்லுநர்களிடம் விதி ஒன்று உண்டு, ஒரு பழகீனமான ஹதீஸ் பல விதத்தில் அறிவிக்கப்பட்டி ருக்குமானால் அது ஆதாரமற்றது என்ற நிலையிலிருந்து வெளியேறி ஆதாரம் கொள்ளப்படத்தக்கது என்ற நிலைக்கு வந்து விடும்.
      இந்த விதியின் படி குனூத் குறித்த தகவல்கள் ஆதாரம்  கொள்ளப்படத்தக்கது என்று ஆகி விடும் ஏனெனில் குனூத் உடைய அறிவிப்பபுகள் பல அறிவிப்பாளர்கள் வாயிலாக ,பல விதங்களில் அறிவிக்கப்பட்டிருப்பதை மாற்று கருத்துள்ளவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்துக்களிலிருந்தே தெரிகிறது .
      3) பொய்யெனக் கருதப்படக் கூடிய ஒரு செய்தியை என்னிடமிருந்து ஒருவன் அறிவித்தால் அவன் பொய்யர்களில் ஒருவனாவான்.

நூல்: முஸ்லிம்

என் மீது யார் வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.

நூல்: புகாரி

      இது  நீங்கள் எனக்கு அனுப்பிய தகவலின் இறுதியில் இடம் பெற்றுள்ள ஹதீஸாகும், இது சத்தியமானது, உண்மையானது என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை . ஆனால் இது தகவல் பொய்யானதாக இருந்தால் மட்டுமே பொருந்தும், குனூத் குறித்து வந்துள்ள தகவல்கள் யாவும் பொய்யானது என எந்த அறிஞரும் கூற வில்லை, அப்படியிருக்க மேற்கண்ட நபி மொழியை குனூத் உடைய ஹதீஸ்களுக்கு கொண்டு பொருத்துவது அநீதமில்லையா? இது பலஹீனமான ஹதீஸ்கள் யாவும் பொய்யானது, இட்டுக்கட்டப்பட்டது என்ற தவறான நிலை பாட்டினை மாற்றுக்கருத்துள்ளவர்கள் கொண்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்திக்காட்டுகிறது , இது முன்னோர்களின் போக்குக்கு எதிரானதாகும், இதில் நாம் உடன்பட முடியாது.
    

No comments:

Post a Comment