وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ (60) وَإِذْ قُلْتُمْ يَامُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ (61)
இஸ்ராயீலின் சந்ததியினர்களே ! இத்தருணத்தையும் நீங்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளீர்கள் , நீங்கள் தீஹ் பாலை வெளியில் இருந்த போது குடிப்பதற்கு நீரின்றி தவித்தீர்கள் , உங்களுடைய தவிப்பை உங்களுடைய தூதர் மூஸா(அலை) அவர்களிடம் வெளிப்படுத்தினீர்கள் , அவர்கள் இருந்ததோ வரண்ட பாலைவெளி, தண்ணீர் கிடைப்பதற்கான அத்தனை வழிகளும் அடைபட்டுக் கிடக்கும் பகுதி , இங்கே அல்லாஹ்வை தவிர்த்து அவர்களுக்கு உதவ யாருமே இல்லை, அல்லாஹ் சகல சக்தி படைத்தவன், அவனுடைய சக்திக்கு அப்பாற்பட்டது எதுவுமே இல்லை. இந்த நம்பிக்கை மூஸா(அலை) அவர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி இருந்ததால் தண்ணீருக்காக அந்த அல்லாஹ்வின் வாசல் கதவை தட்டினார்கள்,அங்கே மட்டும்தான் தன் சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் என்பதை அவர்கள் உறுதி கொண்டிருந்தார்கள் , ஆதலால் மூஸா அலை தன் சமுதாயத்திற்காக தண்ணீர் வேண்டிய போது அவருக்கு நாம் கூறினோம் , மூஸாவே உங்களால் முடிந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். உங்களின் கைத்தடியால் இந்த பாறையில் அடியுங்கள், அதற்கு பிறகுள்ள காரியம் எம்மைச் சார்ந்தது, மூஸா(அலை)மும் நம் கட்டளையை ஏற்று தம் கைத்தடியால் பாறையை அடித்தார்கள். அல்லாஹ்வின் ஆற்றல் அங்கே வெளிபட்டது , அவர்கள் அடித்ததுதான் தாமதம் அப்பாறாங்கல்லிலிருந்து ஒன்றல்ல, இரண்டல்ல , பனிரெண்டு ஊற்றுகள் பீறிட்டு வெளியாயின. ஏனெனில் பனூ இஸ்ராயீல்கள் பனிரெண்டு பெரும் பெரும் குடும்பங்களாக இருந்தனர், ஒரே ஓர் ஊற்று மட்டும் பீறிட்டிருந்தால் அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட வாய்ப்புள்ளது. அது சமூகத்தில் சண்டைகள், சச்சரவுகளை உண்டு பண்ணும். ஆதலால் அல்லாஹ் தண்ணீரை அளித்தது மட்டுமல்லாமல் அதனை சிரமமின்றி பெறுவதற்கான ஏற்பாட்டை செய்யும் வகையில் அதை 12 ஊற்றுகளாக பீறிடச் செய்தான். அதனால் ஒவ்வொரு குடும்பத்து மனிதர்களும் தமது தமது ஊற்றெது ? நீரருந்தும் இடம் எது ? என்பதை தனித்தனியாக பிரித்து தெரிந்து கொண்டார்கள் தண்ணீரைக் கண்டதும் அவர்கள் யாவரும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். மன்னு சல்வா எனும் உணவையும், அருந்த மதுரமான நீரையும் தந்து அவர்களின் சிரமங்களை போக்கிய பின் அல்லாஹ் அவர்களிடம் கூறினான் , நீங்கள் அல்லாஹ்வுடைய ரிஸ்கிலிருந்து நன்கு உண்ணுங்கள், பருகுங்கள் , ஆனால் நற்காரியங்கள் புரிந்து வாழுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் பாவங்கள் புரிந்து கொண்டு குழப்பங்கள் செய்து கொண்டு திரியாதீர்கள். மனிதனுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் தங்கு தடையில்லாமல் தாராளமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டால் அவன் கொடுத்த அல்லாஹ்வையே மறந்து விடுகிறான் , பாவங்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறான் , இது தவறான போக்காகும் , பூமியின் வளங்களும் , அல்லாஹ்வின் இன்னும் பிற அருள் பாக்கியங்களும் மனிதனுக்கு அளிக்கப்படுவது அவன் அவற்றை அனுபவித்து தன்னை இறை திருப்தியில் ஈடுபடச் செய்வதற்குத்தான் , பாவங்கள் புரிவதற்கும் , இறைவனை மறுப்பதற்கும் அல்ல. இன்று நாம் வாழும் உலகில் செல்வ வளம் கொழிக்கும் பிரதேசங்களிலெல்லாம் இறைவனின் வரம்புகள் அப்பட்டமாக மீறப்படும் காட்சி வழக்கமாகி விட்டது , அல்லாஹ் இதனை விளங்கி அமல் செய்ய தவ்பீக் செய்வானாக ! ஆமீன்.
படிப்பினைகள்: எந்த ஒர் தேவை ஏற்பட்டாலும் அல்லாஹ்விடத்தில் வேண்ட வேண்டும். உலகிலுள்ள எந்த பொருளுக்கும் சுயமாக எவ்வித சக்தியுமில்லை. அல்லாஹ் அதிலிருந்து என்ன சக்தியை வெளிப்படுத்த நாடுகின்றானோ அதைதான் ஒவ்வொன்றும் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு சிக்கலிலும் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் , மிச்சத்தை அல்லாஹ்விடம் விட்டு விட வேண்டும் , அதற்கு பெயர்தான் தவக்குல் எனப்படும் , பாறாங்கல் போன்றவற்றிலிருந்து தண்ணீர் பீரிட்டு அடிப்பது இது அறிவுக்கு பட்டாலும் சரி, படாவிட்டாலும் சரி அதை நம்பி உறுதி கொள்ள வேண்டும். இதற்குத் தான் ஈமான் எனப்படும்.
மேலும் இஸ்ரவேலர்களே ! நீங்கள் அந்த தருணத்தையும் சிந்தித்து பாருங்கள் , தீஹ் என்ற பாலைவெளியில் உங்களுக்கு எவ்வித செலவும் சிரமமுமில்லாமல் இலகுவான முறையில் மன்னுசல்வா எனும் உயர் ரக உணவு ஏற்பாட்டை செய்து தந்தோம். ஆனால் நீங்கள் அதன் மதிப்பை உணராமல் உங்களுடைய தூதர் மூஸா(அலை) அவர்களிடம் வந்து மரியாதை பேணாமல் மூஸாவே என பெயர் கூறி அழைத்து எங்களால் இனி ஒரு நிமிடம் கூட ஒரே வகை உணவை மட்டும் உட்கொண்டு விட்டு பொறுமையாக இருக்கவே முடியாது, வகை, வகையான உணவுகளை உண்ண ஆசைப்படுகிறோம். ஆதலால் நீர் உம்முடைய இரட்சகனிடம் எங்களுக்காக பிரார்த்தியுங்கள், அவன் எங்களுக்காக பூமியிலிருந்து விளையக் கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் போன்ற காய்கறி வகைகளை வெளிப்படுத்தி தர வேண்டும் என்று கேளுங்கள் என கூறினீர்களே , அல்லாஹ்விடமும், அவன் ரசூலிடமும் நீங்கள் நடந்து கொண்ட ஒழுக்கக்கேடுகள் இந்த வார்த்தைகளில் தொனிக்கிறதல்லவா ? . ஒரு நபியிடம் துஆ செய்ய வேண்டுவதற்கு சாப்பாடு ஒன்று மட்டும் தான் கிடைத்ததா ? அவ்வாறே வேண்டினாலும் எதை விட்டுவிட்டு எதை கேட்கச்சொல்கிறீர்கள் ? உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த மன்னு சல்வா எனும் உணவு உயர் ரகமானதும் , எவ்வித சிரமமும், உழைப்புமில்லாமல் இலகுவாக கிடைத்துக் கொண்டிருக்கக்கூடியதுமாகும் , அதை போய் ஒதுக்கி விட்டு பூமியிலிருந்து கிடைக்கும் சாதாரண காய்கறி வகைகளை வேண்டுகிறீர்களே . இக்காய்கறி வகைகள் உங்களுக்கு மன்னு சல்வா எனும் உணவை விட எந்த வகையில் உயர்ந்தது என கூறுங்கள் , அது மட்டுமின்றி அக்காய்கறிகளை பெற வயலில் இறங்க வேண்டும், பயிரிட வேண்டும், இரவு, பகலாக உழைக்க வேண்டும் , இது போன்ற பல்வேறு சிரமங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டும், இதைதான் மூஸா (அலை) கேட்டார்கள். உயர் ரகமான ஒன்றை விட்டு விட்டு அதற்கு பதிலாக மட்டமான ஒன்றையா மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்கள்? உங்கள் நிலை கண்டு நான் வருத்தப்படுகின்றேன். ஏன் இவ்வாறு கீழ்த்தரமாக சிந்திக்கிறீர்கள் ? உயர்ந்த சிந்தனைகள் வேண்டாமா ? இங்கிருந்து செல்லுங்கள் , இனி மன்னு ஸல்வா உணவு உங்களுக்கு கிடைக்காது , ஏதாவது நகரில் சென்று தங்குங்கள். அங்கே உங்களுக்கு வேண்டியவற்றை, நீங்கள் கேட்பவற்றை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு வேதம் கொடுக்கப்பட்டும் , நபியும் அனுப்பப்பட்டும் , அவர்கள் வேண்டியவைகளெல்லாம் இறைவனால் தரப்பட்டும் கூட அவற்றின் மூலம் உலகில் மேலோங்கி இருக்க வேண்டிய ஒரு சமுதாயம் தம் கீழ்த்தரமான செயல் பாடுகளினாலும், ஒழுங்கீனங்களினாலும் தம் மதிப்பை இழந்து, அல்லாஹ்வுடைய கருணையை இழந்து இறுதியாக அவர்கள் மீது இழிவும், வறுமையும் காலத்திற்கும் சுவடாக படிந்து போகட்டுமாக என்ற இறைவனின் சாபத்திற்கு உள்ளானார்கள் , இதன் விளைவு வரலாறு முழுக்க யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டும், கொல்லப்படுக் கொண்டும் வந்தார்கள் , இன்றளவிலும் யூதர்கள் என்றால் உலக அரங்கில் அவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கைகளும் , சூழ்ச்சிகளும் தவறாமல் நினைவு கூறப்படுகின்றன, இது அவர்களே தேடி கொண்ட இழி நிலையாகும் , மேலும் அவர்கள் கருணையாளர்களிலெல்லாம் கருணையாளனான அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளாகிவிட்டார்கள் , இவற்றிற்கெல்லாம் பெரும் காரணங்கள் நான்கு 1, அவர்கள் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளையெல்லாம் ஏற்க மறுத்தார்கள். 2 , அட்டூழியத்தின் உச்சகட்டமாக நேர்வழியை வெறுத்தது மட்டுமின்றி தமக்கு நேர்வழி காட்ட வந்த அல்லாஹ்வின் பரிசுத்தமான நபிமார்களையே எவ்வித உரிமையுமில்லாமல் அநியாயமாக கொலை செய்தார்கள். 3. மேலும் அவர்களின் இந்த இழி நிலைக்கு 3 வது காரணம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்தார்கள். 4, இறைவனின் கட்டளைகளை , அவனது வரம்புகளை துணிந்து மீறி நடப்பவர்களாக இருந்தார்கள். இந்த நான்குமே அவர்களின் வாழ்க்கை முழுக்க நிரம்பி காணப்பட்டது . அல்லாஹ் இது போன்ற பாவிகளின் நிலைகளை விட்டும், குணங்களை விட்டும் பாதுகாத்து அவனுக்கு வழிபட்டு வாழும் நல் அடியார்களில் நம்மை சேர்த்திடுவானாக – ஆமீன் !
படிப்பினைகள்: அல்லாஹ்விடம் வேண்டுவதற்கும் கேட்பதற்கும் ஒரு ஒழுங்கு இருக்கின்றது, பணிவுடன், கெஞ்சி கேட்க வேண்டும். சிந்தனைகளை உயர்வானதாகவும், விசாலமானதாகவும் சிந்திக்க வேண்டும். கீழ்த்தரமான சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். உலகில் கண்ணியம் கிடைப்பதற்கு வழி அல்லாஹ்வின் கட்டளைகளை பேணுவதில் உள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினால் உலகில் இழிவும் மறு உலகில் ஏமாற்றமும் தான் மிஞ்சும்.
No comments:
Post a Comment