Wednesday, October 3, 2018

துட்சமாக பார்க்கப்படும் நன்மைகள் 4


55, ஜும்ஆவுடைய நாள் குளிப்பும், நறுமணமும்

             ஜும்ஆவுடைய நாளில் குளிப்பதற்கும் ஹதீஸிலே அதிகமான சிறப்புகள் வந்துள்ளன , குளிக்கும்போது இந்த குளிப்பு ஜும்ஆவுக்காக  என நிய்யத் வைக்கவேண்டும் , மேலும் குளித்த பின் நறுமணம் பூசுவதும் சுன்னத்தாகும் , சுன்னத்தை பின்பற்றுதல் என்ற நிய்யத்துடன் இவற்றை செய்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் , ஹஜ்ரத் அபூ அய்யூப் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَمَسَّ مِنْ طِيبٍ إِنْ كَانَ عِنْدَهُ، وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ، ثُمَّ خَرَجَ حَتَّى يَأْتِيَ الْمَسْجِدَ فَيَرْكَعَ إِنْ بَدَا لَهُ، وَلَمْ يُؤْذِ أَحَدًا، ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّى يُصَلِّيَ، كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى  
      எவர் ஜும்ஆ நாளில் குளித்து,  தன்னிடம் நறுமணமிருந்தால் நறுமணம் பூசி, நல்ல ஆடைகளை அணிந்து , பின்னர் வீட்டிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு வந்து , அவர் நாடிய தொழுகைகளை தொழுது பின்னர் யாருக்கும் தொந்தரவு தராமல்  தொழுகை முடியும் வரை அமைதி காத்து இருப்பாரானால் அவருடைய இந்த அமல் இந்த ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆவரை வுள்ள சிறு பாவங்களுக்கான பரிகாரமாக போய்விடுகிறது .
             ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் , ஜும்ஆவுடைய நாளில் குளிப்பது, முடிகளின் வேர்பகுதியிலிருந்து கூட சிறு பாவங்களை வெளியேற்றிவிடுகிறது . தப்ரானி
           மேலும் ஜும்ஆ நாளில் குளித்து , நறுமணம் பூசிய பின் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பள்ளிக்கு செல்ல வேண்டும் , ஒரு ஹதீஸில் வருகிறது , ஜும்ஆவுடைய நாளில் மலக்குகள் பள்ளியின் வாயில்களில் நின்றுகொண்டு முந்தி வருபவர்களின் பெயர்களை எழுதுகிறார்கள் , எவர் முதன்முதலாக பள்ளிக்கு வருவாரோ அவருக்கு ஒரு ஒட்டகம் குர்பானி செய்த நன்மையும் , இரண்டாவது வருபவருக்கு மாடு குர்பானி கொடுத்த நன்மையும் , மூன்றாவது வருபவருக்கு ஆடு குர்பானி கொடுத்த நன்மையும் , நான்காவது வருபவருக்கு கோழி , இறுதியாக வருபவருக்கு முட்டை சதகா செய்த நன்மையும் கிடைக்கும் , இமாம் குத்பாவுக்காக எழுந்துவிட்டால் மலக்குகள் தன்னுடைய  பதிவேடுகளை சுருட்டிவிடுகின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)


56, நோன்பிலே ஸஹர் சாப்பிடுதல்

                 ரமலானுடைய நோன்பாக இருந்தாலும் சரி , அல்லது நபிலான நோன்பாக இருந்தாலும் சரி , இரண்டுமே பெரிய வணக்கமாகும். அவற்றில் ஸஹர் உண்னுவது தனி நன்மைக்குறிய செயலாகும், ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள், ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது. (புஹாரி)
            ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி ) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِين
           நிச்சயமாக அல்லாஹ்வும் , மலக்குகளும் ஸஹர் சாப்பிடுபவர்களுக்காக ரஹ்மத்துடைய வாழ்த்து தெரிவிக்கிறார்கள் (தப்ரானி)
                 ஹஜ்ரத் அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள் ,  நபி (ஸல்) கூறினார்கள்
السَّحُورُ أَكْلُهُ بَرَكَةٌ، فَلَا تَدَعُوهُ، وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ، فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ
            ஸஹர் முழுக்க பரக்கத்தாகும் , அதை விட்டு விடாதீர்கள் , அது ஒரு மிடர் தண்ணீர் அருந்துவதாக இருந்தாலும் சரி , நிச்சயமாக அல்லாஹ்வும் , மலக்குகளும் ஸஹர் செய்பவர்கள் மீது ரஹ்மத்வுடைய வாழ்த்து தெரிவிக்கிறார்கள்  (முஸ்னத் அஹ்மது )
           ஸஹரிலே சிறந்தது இரவின் கடைசி பாகத்தில் சாப்பிடுவதுதான்.


57, இஃப்தாரை துரிதப்படுத்துதல்

                  நோன்பின் போது சூரியன் மறைவு உறுதியாகிவிட்டால் அதற்குப்பின் இஃப்தார் செய்வதை துரிதப்படுத்தவேண்டும் , காரணமில்லாமல் தாமதப்படுத்தக்கூடாது.
            ஹஜ்ரத் ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் , எதுவரை மக்கள் இஃப்தார் செய்வதை துரிதப்படுத்துவார்களோ அதுவரை  அவர்கள் நலவில் இருப்பார்கள் (புஹாரி, முஸ்லிம்)
           ஹஜ்ரத் அபூ ஹ
ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபியவர்கள் சொன்னார்கள் , எவர்கள் துரிதமாக இஃப்தார் செய்வார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நேசமானவர்கள். (அஹ்மது, திர்மிதி)


58, நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்தல்

           ஏதேனும் நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்தலும் மிகவும் நன்மைக்குறிய அமலாகும் , ஹஜ்ரத் ஜைது இப்னு காலித் ஜுஹ்னி (ரலி) அறிவிக்கிறார்கள்,  நபி (ஸல்) கூறினார்கள்

مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا
          எவர் ஏதேனும் நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்வாரோ அவருக்கு நோன்பாளிக்கு சமமான கூலி கிடைக்கும், நோன்பாளியின் கூலியில் எதுவும் குறைக்கப்படமாட்டாது.
           ஹஜ்ரத் ஸல்மான் ஃபாரிசி (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் , எவர் ரமலான் மாதத்தில் ஏதேனும் நோன்பாளிக்கு நோன்பு திறக்கச்செய்வாரோ அது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், நரகிலிருந்து அவருடைய பிடரி விடுவிக்கப்படுவதற்கும் காரணமாகிவிடும், மேலும் அவருக்கு நோன்பாளியின் நோன்புக்கு சமமான கூலி கிடைக்கும், அதே நேரத்தில் நோன்பாளியின் கூலியிலிருந்து  எதுவும் குறையாது ,  ஸஹாபாக்கள் கேட்டார்கள் , எங்களில் ஒவ்வொரிடத்திலும் நோன்பாளியை நோன்பு திறக்க செய்யும் அளவுக்கு வசதியிருக்காதே , எவர் ஒரு பேரித்தையைக்கொண்டு அல்லது தண்ணீரைக்கொண்டு அல்லது பாலின் ஒரு மிடரைக்கொண்டு நோன்பாளியை நோன்பு திறக்கச்செய்வாரோ அவருக்கும் அல்லாஹ் இந்த கூலியை தருவான் என்று நபி ஸல் அவர்கள் பதிலளித்தாரகள் . (ஸஹீஹ் இப்னு ஹஸைமா )


59, ஹாஜி, முஜாஹித்வுடைய வீட்டை கவனித்துக்கொள்ளுதல்

                ஹஜ்ஜும், ஜிஹாதும் பெரிய வணக்கங்களாகும் , ஆனாலும் எவர்கள் தம் இயலாதனத்தால் இந்த பெரும் வணக்கங்களை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையாமல் போய்விடுவார்களோ அவர்களுக்கும் அல்லாஹத்தஆலா இந்த பெரும் வணக்கங்களின் நன்மையில் பங்குதாரராக ஆகுவதற்கான ஒரு சிறந்த வழியை வைத்துள்ளான் , அது யாதெனில்  ஒருவர் ஒரு முஜாஹித்வுடைய ஜிஹாதுக்கான தயாரிப்பில் அல்லது ஒரு ஹாஜிவுடைய ஹஜ்ஜுக்கான தயாரிப்பில் உதவினால்  அல்லாஹ் அவரையும் ஜிஹாத் இன்னும் ஹஜ்ஜுடைய நன்மையில் பங்குதாரராக ஆக்கிவிடுகிறான்,  இதே போல ஜிஹாதுக்கோ, ஹஜ்ஜுக்கோ ஒருவர் சென்றபின் அவருடைய வீட்டினர்களை கவனித்துக்கொள்வது , அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்து தருவது  போன்றவை எத்தகைய  நல் அமல்கள்  என்றால் அவற்றின் மூலமும் ஒருவர்  ஹஜ் அல்லது ஜிஹாதுடைய நன்மையில் பங்காளியாகி விடமுடியும்.
          ஹஜ்ரத் ஜைது இப்னு காலித் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
 مَنْ جَهَّزَ غَازِيًا، أَوْ جَهَّزَ حَاجًّا، أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ، أَوْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أُجُورِهِمْ مِنْ غَيْر أَنْ يَنْتَقِصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ
              எவர் ஒரு முஜாஹிதை ஜிஹாதுக்காக தயார் செய்வாரோ அல்லது ஒரு ஹாஜியை ஹஜ்ஜுக்காக தயார் செய்வாரோ அல்லது அவருக்கு பின்னால் அவருடைய வீட்டினர்களை கவனித்து கொள்வாரோ, அல்லது ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்வாரோ இவர்களுக்கெல்லாம் கிடைக்கும் நன்மைகளைப்போல அவருக்கும் கிடைக்கும். அவர்களின் நன்மையில் எந்த குறையும் வராது. ஸஹீஹ் இப்னு குஸைமா

60,ஷஹீதாகுவதற்காக துஆ செய்தல்

              அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகுதல் என்பது மனிதனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாக்கியமாகும் , ஷஹீதுக்கு மிகப்பெரும் சிறப்பு இருப்பது போல அதற்காக ஆசைப்படுவது , துஆ செய்வதற்கும் அல்லாஹூத்தஆலா அதே கூலியை வைத்துள்ளான், ஹஜ்ரத் ஸஹ்ல் பின் ஹனீப் ரலி அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் ,
مَنْ سَأَلَ اللهَ الشَّهَادَةَ بِصِدْقٍ، بَلَّغَهُ اللهُ مَنَازِلَ الشُّهَدَاءِ، وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِه  صحیح مسلم                                              எவரேனும் அல்லாஹ்விடம் உண்மையான உள்ளத்தோடு ஷஹீதாக வேண்டும் என துஆ செய்து வந்தால்  அவர் தன் படுக்கையில் மரணமடைந்தாலும் சரி , அல்லாஹூத்தஆலா அவரை ஷஹீதுடைய அந்தஸ்தை அடையச்செய்கிறான் . முஸ்லிம்
                          ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
مَنْ طَلَبَ الشَّهَادَةَ صَادِقًا، أُعْطِيَهَا، وَلَوْ لَمْ تُصِبْه
                        எவர் உண்மையான உள்ளத்துடன் ஷஹாதத்தை வேண்டுவாரோ வெளிரங்கத்தில் அது அவருக்கு கிடைக்காவிட்டாலும் சரியே  , அவருக்கும் அந்த அந்தஸ்தை தரப்படுகிறது , முஸ்லிம்

61,அதிகாலையில் பணியை துவங்குதல்

பகலுடைய பணியை அதிகாலையிலேயே துவங்குவதற்கும் சிறப்புண்டு என ஹதீஸில் வந்துள்ளது , நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்,
اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا
                  யாஅல்லாஹ்  என்னுடைய சமுதாயத்திற்காக அதன் காலை நேர வேலைகளில் பரக்கத் செய்வாயாக  ,திர்மிதீ
             இதற்கு மாற்றமாக  நபி (ஸல்) அவர்கள் , பஜ்ருக்கு பின் சூரிய உதயத்திற்கு முன் தூங்குவதற்கு தடை விதித்தார்கள் , மேலும் அதனை அபிவிருத்தின்மைக்கான காரணம் என குறிப்பிட்டார்கள்,
              ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களை பஜ்ருக்குப்பின்னர் தூங்க பார்த்த போது அவர்களை எழுப்பி விட்டார்கள் , மேலும் தூங்குவதை தடுத்தார்கள் .தர்கீப், பைஹகீ

62,கடைவீதியில் அல்லாஹ்வை திக்ர் செய்தல்

             மனிதர்கள் தன்னுடைய வேலைக்காக கடைவீதிக்கு சென்றால் அப்போது சிறு சிறு இடைவெளியில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் மிகப்பெரிய நன்மைக்குறிய செயலாகும் , ஹதீஸில் வந்துள்ளது , அல்லாஹ்வுடைய நினைவு மறக்கப்பட்டிருக்கும்  இடங்களில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் என்பது போர்களத்தில் புறமுதுகிட்டு ஓடுபவர்களுக்கு மத்தியில் நிலைத்து நின்று போரிடுதலைப்போன்றாகும், தர்கீப் , பஸ்ஸார் , தப்ரானி
            ஹஜ்ரத் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் பிரபல தாபிஈ யாவார்கள் , அவர்கள் கூறுகிறார்கள் , ஒரு தடவை கடைவீதியில் இருவர் சந்தித்துக்கொண்டார்கள் , அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் வாருங்கள் , மக்கள் மறதியில் இருக்கும் இந்த நேரத்தில் நாம் அல்லாஹ்விடம் இஸ்திக்பார் செய்வோம் , இதை கேட்டு இரண்டாமவரும் இஸ்திக்பார் செய்தார் , அதன்பின் ஒருவர் இறந்து விட , மற்றொருவர் அவரை கனவில் பார்த்தார் , அவர் கூறினார் , நாம் கடைவீதியில் சந்தித்த அந்த மாலையிலேயே அல்லாஹ் நம் இருவரையும் மன்னித்து விட்டான் , (தர்கீப்)
             கடைவீதியில் எந்த வகையான திக்ர் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அது மிகவும் நல்லதே , இருப்பினும்  சில குறிப்பிட்ட திக்ருகளின் சிறப்பு குறித்து ஹதீஸிலே வந்துள்ளது , ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து  இந்த வார்த்தையை அறிவிக்கிறார்கள்
  لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الحَمْدُ يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لاَ يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
            நபி (ஸல்) கூறினார்கள் , எவர் கடைவீதியில் நுழைந்து இந்த வார்த்தைகளை கூறுவாரோ அல்லாஹுத்தஆலா அவருக்காக ஆயிரம் நன்மைகளை எழுதுகிறான், ஆயிரம் சிறு பாவங்களை மன்னிக்கின்றான் , ஆயிரம் அந்தஸ்துகளை உயர்த்துகின்றான் ,திர்மிதீ
             எனவே குறிப்பாக இந்த வார்த்தைகளை மனனமிட்டு கடைவீதியில் இருக்கும் போது அடிக்கடி ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.

63,விற்ற பொருளை திரும்ப பெறுதல்

           சில பொழுது ஒருவர் ஒருவரிடமிருந்து எதையேனும் பொருளை விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்  , ஆனால் பின்பு ஏதோ காரணத்திற்காக அவர் அதை வாபஸ் செய்ய நினைக்கிறார் , இப்படிப்பட்ட சூழ்நிலையில் விற்கப்பட்ட அந்த  பொருளை விற்றவர் திரும்ப பெற்றுக்கொள்வது கட்டாயம் என்றில்லாவிட்டாலும் வாங்கியவரின் கஷ்டத்தை சூழ்நிலையை அனுசரித்து திரும்ப பெற்றுக்கொண்டால் ஹதீஸிலே அதற்கும் சிறப்பு கூறப்பட்டுள்ளது , ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
مَنْ أقَالَ مُسْلِماً بَيْعَتَهُ، أقَالَهُ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَة
          எவர், ஒரு முஸ்லிம் விலைக்கு வாங்கிய பொருளை அவர் திருப்ப நினைத்து  இவரும் திரும்ப பெற்றுக்கொள்வாரோ அல்லாஹூத்தஆலா மறுமை நாளில் அவருடைய தவறுகளை மன்னித்திடுவான்  ,
                                  ஸவாயித் இப்னு ஹிப்பான் ,அபூதாவூது

64,ஒரு தேவையுள்ளவருக்காக கடனளித்தல்

           ஒரு தேவையுள்ளவருக்கு கடனளித்தலும் மிகப்பெரும் நன்மையான காரியமாகும் , ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் , கடனளிப்பது தர்மமாகும், பைஹகீ , தப்ரானி
          இன்னும் சொல்வதானால் ஒரு தேவையுள்ளவருக்கு கடனளிப்பதன் நன்மை தர்மத்தை விட மேலானதாகும் .தர்கீப், தப்ரானி ,பைஹகீ 
        இதற்கு காரணம்  பெரும்பாலும் கடனாக தரப்படும் தொகையை தர்மம் செய்யும் எண்ணம் இருப்பதில்லை , மேலும் அது தரப்படும் நபர் தேவையுள்ளவராக இருப்பார் , ஆனால் மக்களிடம் அவர்  யாசிக்க மாட்டார்  , இதனால்தான் அவருடைய தேவையை பூர்த்தி செய்வதிலும் நன்மை அதிகம் .

65,கஷ்டத்தில் இருக்கும் கடனாளிக்கு தவணை தருதல்

                கஷ்டத்தில் இருக்கும் கடனாளிக்கு கடனை திருப்பி தருவதில்  தவணையை நீட்டித்து தருவதற்கும் குர்ஆன் , ஹதீஸிலே மிகவும் சிறப்பு வந்துள்ளது ,குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் ,
وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ  
      கடன்பட்டவர் நெருக்கடியில் இருந்தால் அவர் நல்ல நிலமையை அடையும் வரை அவருக்கு தவணை  தாருங்கள் ,
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் ,
مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ وَضَعَ لَهُ، أَظَلَّهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ تَحْتَ ظِلِّ عَرْشِهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ
                      எவர் கஷ்டத்தில் இருப்பவருக்கு தவணை தருவாரோ , அல்லது அவருடைய கடனை குறைப்பாரோ அல்லாஹுத்தஆலா அவருக்கு தன்னுடைய நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் தன்னுடைய அர்ஷுடைய நிழலில் நிழல் தருவான் , திர்மிதீ.
          ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள் , நபி ஸல் கூறினார்கள் , முன் சமுதாயத்தவர்களில் ஒருவரின்  உயிரை வானவர்கள் கைப்பற்றினார்கள் , அவரிடம் கேட்கப்பட்டது , நீங்கள் ஏதேனும் நல் அமல் செய்துள்ளீர்களா ? அவர் கூறினார் , நான் மக்களுக்கு கடன் தருவேன் , பின்னர் என்னுடைய வேலையாட்களிடம் கூறுவேன் கஷ்டத்தில் இருப்பவருக்கு தவணை தர வேண்டும் , எவர் வசதியாக இருப்பாரோ அவரிடமும் கூட கடனை வசூலிப்பதில் விட்டுப்பிடித்துதான் நடந்து கொள்ள வேண்டும்  , இதுதான் நான் செய்த அமல் ,  அல்லாஹூத்தஆலா அவர் குறித்து மலக்குகளிடம் கூறினான் , நீங்களும் அம்மனிதரிடம் விட்டு கொடுத்து நடங்கள் , இவ்வாறாக அவருக்கு அல்லாஹ்வுடைய மன்னிப்பு கிடைத்து விட்டது . புஹாரி , முஸ்லிம்.

66,வியாபாரத்தில் உண்மை பேசுதல்

          வியாபாரத்தை பொருத்த வரை அதை உலகம் சார்ந்த வேலை என கருதப்படுகிறது , ஆனால் செய்யும் வியாபாரத்தை ஹலாலான ரிஜ்குக்காக, தன்னுடைய , தன் குடும்பத்தாரின் கடமைகளை நிறைவேற்றுகிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால் வியாபாரத்தின் அனைத்து காரியங்களும் நன்மையை, கூலியை பெற்றுத்தருவதற்கு காரணமாகி விடுகிறது , ஆனால் ஒரு நிபந்தனை அதில் கூடாத காரியங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் , எனவே வியாபாரத்தில் உண்மையோடும், நம்பிக்கையோடும் நடந்து கொள்ளக்கூடியவருக்காக ஹதீஸிலே ஏராளமான சிறப்புகள் வந்துள்ளன , ஹஜ்ரத் அபூஸயீத் குத்ரீ ரலி அறிவிக்கிறார்கள் நபி ஸல் கூறினார்கள் 
التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ
உண்மையான ,நேர்மையான வியாபாரி மறுமை நாளில் நபிமார்களோடும், ஸித்தீன்களோடும் , ஷுஹதாக்களோடும் இருப்பார் .திர்மிதீ

67,மரம் நடுதல்

          தேவையான இடத்தில் மரமோ , செடியோ நடுவதும் மிகவும் நன்மைக்குறிய காரியமாகும் , ஹஜ்ரத் அனஸ் ரலி அறிவிக்கிறார்கள் , நபி ஸல் கூறினார்கள்
مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ، أَوْ إِنْسَانٌ، أَوْ بَهِيمَةٌ، إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ
                               யாரேனும் ஒரு முஸ்லிம் ஒரு மரத்தையோ, அல்லது செடியையோ நட்டினார் , பின்னர் அதிலிருந்து ஒரு பறவையோ, அல்லது மனிதரோ , அல்லது ஒரு விலங்கோ சாப்பிட்டது  என்றால் அதற்காக அவருக்கு ஒரு தர்மம் எழுதப்படும் , புஹாரி , முஸ்லிம்
                அதாவது யாராவது மனிதரோ, அல்லது உயிரினமோ அந்த மரம் அல்லது செடியிலிருந்து பலன் பெற்றால் அதனுடைய நன்மை மரத்தை நட்டியவருக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும் , அது அவருக்கு தொடர் தர்மத்தின் நன்மையை தேடித்தரும் .

68,உயிரினங்களுடன் நன்னடத்தை

               இஸ்லாம் மனிதர்களைப்போல மிருகங்களுக்கும் செய்ய வேண்டிய சில கடமைகளை வைத்துள்ளது , மனிதனுக்கு நோவினையேதும்  தராத பிராணிகளை தேவையில்லாமல் சிரமப்படுத்துவது தடை செய்யப்பட்டதாகும் , எந்த அளவுக்கென்றால் அறுக்கப்படும் பிராணியைக்கூட அதை அறுக்கப்படும் முறையில் அதற்கு மிக குறைவான சிரமம் ஏற்படும்  விதத்தை கையாள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது , நபி ஸல் கட்டளையிட்டார்கள் , அறுப்பதற்கு முன் கத்தியை நன்றாக கூர்மையாக்கிக்கொள்ள வேண்டும் , மேலும் அறுபடும் பிராணிக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ராஹத்தை தர  வேண்டும் , திர்மிதீ.
            எனவே மிருகங்கள் மீது இரக்கப்படுதல் , அவற்றை வளர்த்தல் , அவற்றை தடவிக்கொடுத்தல் ஆகியவை  அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான அமலாகும் , அதற்கு மிகப்பெரிய நன்மையும்  கூலியும் அல்லாஹ்விடத்தில் உண்டு.
          நபி ஸல் அவர்கள் முந்திய சமுதாயத்தை சார்ந்த ஒருவரின் ஒரு நிகழ்வை சொல்லிக்காட்டினார்கள் , அவர் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது அவருக்கு கடும் தாகம் ஏற்பட்டது , தண்ணீர் தேடிய போது   அவருக்கு ஒரு கிணறு கண்ணுக்கு பட்டது , ஆனால் அதிலிருந்து தண்ணீர் இரைக்க வாலி இல்லை , அவர் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் அருந்தி விட்டு வெளியே வந்தார் , அவர் அங்கிருந்து செல்ல ஆரம்பித்த போது அருகிலே நாய் ஒன்றை பார்த்தார் , அது தாகத்தால் மண்ணை நக்கிக்கொண்டிருந்தது , தனக்கு ஏற்பட்ட தாகத்தை போலவே அதற்கும் தாகம் ஏற்பட்டுள்ளது என அந்த நாயின் மீது அவருக்கு இரக்கம் வந்தது , தன் காலிலிருந்து காலுரையை கழட்டி கிணற்றுக்குள் இறங்கி அது நிரம்ப தண்ணீர் நிரப்பி அதை வாயில் கவ்விய படி வெளியே வந்து அந்த நாயுக்கு குடிக்கச்செய்தார் , அவர் செய்த  இந்த அமல் அல்லாஹ்வுக்கு எவ்வளவு பிரியமாகி விட்டது என்றால் அதன் காரணமாகவே  அல்லாஹ்  அவரை மன்னித்து விட்டான் ,  புஹாரி , முஸ்லிம்

69,நோவினை தரும் உயிரினங்களை கொல்லுதல்

            எந்த உயிரினம் இடர் தருமோ , அவற்றால் மனிதர்களுக்கு கஷ்டம் ஏற்படும் என்ற அச்சம் இருந்தால் அவற்றை கொல்வதும் நல் அமலாகும் , அதற்கு கூலியும் நன்மையும் கிடைக்கின்றது , உதாரணமாக பாம்பையோ , தேளையோ கொல்வதற்கும் நன்மை வாக்களிக்கப்பட்டுள்ளது ,  ஒரு தடவை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் , அப்போது சுவற்றில் பாம்பொன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது , அவர்கள் உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஒரு குச்சியை எடுத்து பாம்பை அடித்து கொன்றார்கள் , பின்னர் கூறினார்கள் , நான் நபி ஸல் அவர்கள் கூற கேட்டுள்ளேன்  
من قتل حَيَّة أَو عقربا فَكَأَنَّمَا قتل مُشْركًا قد حل دَمه
                 யாரேனும் பாம்பையோ,அல்லது தேளையோ கொன்றால் அவர்  கொல்வது ஹலாலான ஒரு முஷ்ரிக்கை கொன்றவரைப்போன்றாவார். தர்கீப் .
          இதே போல நபி ஸல் அவர்கள் பல்லியை கொல்வதற்கும்  உத்தரவிட்டுள்ளார்கள் , ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள் , நபி ஸல் கூறினார்கள்  , எவர் பல்லியை ஒரே அடியில் கொல்லுவாரோ அவருக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் , எவர் இரண்டு அடியில் கொல்லுவாரோ அவருக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என முதலில் கூறிய நன்மையை விட குறைத்து கூறினார்கள் , எவர் மூன்றாவது அடியில் கொல்லுவாரோ அவருக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என இரண்டாவது கூறிய நன்மையை விட குறைத்து சொன்னார்கள் .( முஸ்லிம் )
            இவ்வாறே நோவினை தரும் பிற உயிரினங்களை , மனிதர்களுக்கு ஆபத்தாக அமையும் பிராணிகளை கொல்வதற்கும் இதே போல நன்மை கிடைக்கின்றது .

70,நாவடக்கம் மேற்கொள்ளுதல்

                              நாவு அல்லாஹ்வின் மிகப்பெரும் பாக்கியமாகும் , மனிதன் நினைத்தால் அதன் மூலம் மறுமைக்காக நன்மைகளின் கஜானாவை சேகரித்து விடலாம் , நினைத்தால் அந்த நாவை வைத்தே தன்னுடைய மறுமையை அழித்தும் கொள்ளலாம் , இதனால்தான் நாவை அடக்கி வைப்பதற்கும் ,பேச்சை குறைத்துக்கொள்வதற்கும் மிகப்பெரும் சிறப்புகள் வந்துள்ளன , ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அறிவிக்கிறார்கள் , நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன் , எல்லாவற்றிலும் மிகச்சிறந்த அமல் எது நபியவர்கள் பதிலளித்தார்கள் தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது ,  பின்னர் நான் கேட்டேன் , அதற்கு பிறகு எந்த அமல் சிறந்தது , நபியவர்கள் சொன்னார்கள்        أَنْ يَسْلَمَ النَّاسُ مِنْ لِسَانِكَ  உன்னுடைய நாவை விட்டும் மக்கள் பாதுகாப்பு பெற்றிருப்பதாகும் , அதாவது பிறர் மனதை துன்புறுத்துவதை விட்டு , புறம் பேசுவதை விட்டு, ஏமாற்றுவதை விட்டு தனது நாவை தடுக்க வேண்டும் ,
            ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் ரலி அவர்கள் , நபியவர்களிடம் கேட்டார்கள் , ஈடேற்றத்திற்கான வழி என்ன ?  நபியவர்கள் சொன்னார்கள்
أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ , وَلْيَسَعْكَ بَيْتُكَ , وَابْكِ عَلَى خَطِيئَتِكَ
                           உனது நாவை உனது கட்டுப்பாட்டில் வை , உனது வீடே உனக்கு விசாலமாகட்டும் , அதாவது தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி சோதனையில் சிக்கிக் கொள்ளாதே , மேலும் உன்னுடைய பாவத்தை எண்ணி அழு, அதாவது செய்த பாவத்திற்காக வருத்தப்பட்டு தவ்பா செய் . அபூதாவூது ,திர்மிதீ
         மற்றொரு ஹதீஸிலே இருக்கிறது ,  நபி ( ஸல் )அவர்கள் ஹஜ்ரத் அபூதர் கப்பாரி  (  ரலி )  அவர்களிடம் கூறினார்கள் , மனிதனுக்கு பாரமில்லாத , ஆனால் அமல்களின் தராஸில் மிகவும் பாரமாக தெரியும்  இரண்டு அமலை உங்களுக்கு நான் சொல்லித்தரட்டுமா ?  அவசியம் சொல்லித்தாருங்கள் யாரசூலல்லாஹ் ! என ஹஜ்ரத் அபூதர் ரலி அவர்கள் பதிலளித்தார்கள்  ,
عَلَيْكَ بِحُسْنِ الْخُلُقِ , وَطُولِ الصَّمْتِ
நற்குணத்தையும் , நீண்ட மௌனத்தையும் கடைபிடியுங்கள் ,  ( தர்கீப் )
 ஒரு தடவை நபியவர்கள் ஹஜ்ரத் அபூதர்  ( ரலி )அவர்களுக்கும்  இதே விசயத்தை கூறினார்கள் . 

71,வீண் பேச்சுக்களையும் ,வேலைகளையும் விடுதல்

               எந்த வேலையில் உலகு , மறு உலகு சார்ந்த பலன் ஏதும் இருக்காதோ அது வீணானதாகும் , குர்ஆனிலும் ஹதீஸிலும் வீண் வேலைகளை விட்டும் ,பேச்சுக்களை விட்டும் தவிர்ந்து கொள்ள அதிகம் வலியுறுத்தியும் , ஆர்வமூட்டியும் வந்துள்ளது , குர்ஆன் ஈடேற்றம் பெறும் முஃமின்களின் தன்மைகளை விவரிக்கும் போது கூறுகிறது
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
அவர்கள் வீண் வேலைகளை விட்டும் ஒதுங்கிக்கொள்வார்கள்
மேலும் ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ
ஒரு மனிதனின் அழகிய இஸ்லாத்திற்கு அடையாளம் , அவர் தனக்கு பலனேதுமில்லாத  தேவையற்ற காரியங்களை விட்டும் ஒதுங்குவதாகும். (திர்மிதீ)
எனவே தேவையற்ற விவாதங்கள் , பிரயோஜனமில்லாத வேலைகள் ,வீண் ஈடுபாடுகளை விட்டு தவிர்ந்து கொள்ள முயற்சிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயமாகும்.

72,ஆறு நற்காரியங்கள்

                           ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஆறு நற்காரியங்களை கூறினார்கள் , அவற்றை பேணி வருபவருக்கு சுவனத்திற்கான உத்தரவாதத்தையும் தந்தார்கள் , ஹஜ்ரத் உபாத்துப்னுஸ்ஸாமித் (ரலி) அறிவிக்கிறார்கள்,  நபி (ஸல்) கூறினார்கள்,
 اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنُ لَكُمُ الْجَنَّةَ: أَدُّوا إِذَا ائْتُمِنْتُمْ، وَأَوْفُوا إِذَا عَاهَدْتُمْ، وَاصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ، وَغُضُّوا أَبْصَارَكُمْ، وَكُفُّوا أَيْدِيَكُمْ
          உங்கள் தரப்பில் ஆறு விஷயத்திற்கு பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள் , நான் உங்களுக்கு சுவனத்திற்கான உத்தரவாதம் தருகிறேன் , உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் அந்நம்பிக்கையை காப்பாற்றுங்கள் , யாரோடும் உறுதிமொழி ,  ஒப்பந்தம் செய்தால் அதை பூர்த்தி  செய்யுங்கள் , பேசினால் உண்மை பேசுங்கள் , தன் மறைவிடங்களை தவறுகளை விட்டும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் , தன் பார்வையை தாழ்த்துங்கள் , தன் கரங்களை பிறருக்கு தீங்கு தருவதை விட்டும் , பாவம் செய்வதை விட்டும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்     .(  ஷுஅபுல் ஈமான் ,பைஹகீ )

73,வலது புறமாக ஆரம்பித்தல்

               நற்காரியங்களை வலது புறமாக ஆரம்பிப்பதும் அல்லாஹ்வுக்கும்  , அவனுடைய தூதருக்கும் பிரியமான அமலாகும் , அதற்கும் நன்மை உண்டு என நம்பலாம் , ஹஜ்ரத் ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள் நபி ஸல் அவர்கள் தன் எல்லா காரியத்தையும் வலது புறமாக ஆரம்பிப்பவராக இருந்தார்கள் , ஒழுவிலும், தலை வாருவதிலும், செருப்பு அணிவதிலும் இவ்வாறே நடப்பார்கள் .
      ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அறிவிக்கிறார்கள் , நபி ஸல் கூறினார்கள்
إِذَا لَبِسْتُمْ، وَإِذَا تَوَضَّأْتُمْ، فَابْدَءُوا بِأَيَامِنِكُم
       நீங்கள் ஆடை அணிந்தாலும் , ஒழு செய்தாலும் வலது புறமாக ஆரம்பியுங்கள் , அபூதாவூது  
ஹஜ்ரத் அபூஹுரைரா ரலி அவர்களே அறிவிக்கிறார்கள் , நபி ஸல் கூறினார்கள்
إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِاليَمِينِ، وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ
       உங்களில் யாரேனும்  செருப்பு அணிந்தால் வலது புறமாக ஆரம்பிக்கட்டும் , கழட்டும் போது இடது புறமாக ஆரம்பிக்கவும்.புஹாரி, முஸ்லிம் .
         இதே போல நபி ஸல் அவர்கள் வலது கையால் சாப்பிட கட்டளையிட்டார்கள் , இடது கையால் உண்பதை தடுத்தார்கள் , ஹஜ்ரத் இப்னு உமர் ரலி அறிவிக்கிறார்கள் , நபி ஸல் கூறினார்கள் , உங்களில் யாரேனும் உணவு சாப்பிட்டால் வலது கையால் சாப்பிடவும்  , அருந்தும் போது வலது கையால் அருந்தவும் , முஸ்லிம்
       ஏதேனும் பொருளை பலருக்கு பங்கிட்டுக்கொடுப்பதாக இருந்தால் அப்போதும் வலது புறத்திலிருந்து பங்கிட ஆரம்பிக்க வேண்டும் , இதுவே நபியவர்களின் வழமையாக இருந்தது.
        கழிவறைக்குள் செல்லும் போது இடது காலை முதலில் வைக்க வேண்டும் , வெளியே வரும் போது வலது காலை முதலில் வைக்க வேண்டும் , மேலும் பள்ளியினுள் நுழையும் போது இதற்கு நேர்மாற்றமாக வலது காலை முதலிலும் ,வெளியேறும் போது இடது காலை முதலிலும் வைக்க வேண்டும் ,சுன்னத்தை பின்பற்றும் எண்ணத்துடன் இவற்றை செய்யும் போது இந்த எல்லா காரியங்களும் நன்மைக்குறியதாக போய் விடும்,
         இவைகள் முற்றிலும் எளிமையான அமல்களாகும் , சிறிது கவனத்தோடு இவ்வாறு செய்வதை வழமையாக்கிக்கொண்டால் இவற்றின் மூலம் சுன்னத்தை பின்பற்றுவதன் பிரகாசம் கிடைத்து விடும் , மேலும் பிள்ளைகளையும் ஆரம்பத்திலிருந்தே இவற்றிற்கு பழக்கப்படுத்த வேண்டும்  .

74,கீழே விழுந்த உணவை சுத்தப்படுத்தி உண்பது

          நபி ஸல் அவர்கள் இதையும் கற்றுத்தந்துள்ளார்கள் , உணவு உண்ணும் போது ஏதேனும் கவளம் தரையில் விழுந்து விட்டால் அதை எடுத்து அதிலே தூசு ஏதேனும் ஒட்டியிருந்தால் அதை சுத்தப்படுத்தி , கழுவ தேவைப்பட்டால் அதை கழுவி சாப்பிட வேண்டும் , ஹஜ்ரத் ஜாபிர் ரலி அறிவிக்கிறார்கள் நபி ஸல் கூறினார்கள்
           உங்களில் ஒருவரின் உணவு கீழே விழுந்து , அதிலே  விரும்பத்தகாத பொருள்  ஒட்டியிருந்தால் அதை அப்புறப்படுத்தி விட்டு அதை உண்ணவும் , ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் , உணவுண்டு முடித்ததும் தன் விரல்களை சூப்பிக்கொள்ள வேண்டும் , ஏனெனில் உணவின் எந்த பகுதியில் பரகத் இருக்கிறதென அவருக்கு தெரியாது , முஸ்லிம்
                        இந்த ஹதீஸின் அடிப்படையில் அல்லாஹ்வுடைய ரிஜ்கை அலட்சியம் செய்வது ஷைத்தானிய செயலாகும் என்பதும் , அதை எடுத்து உண்பதில் ரிஜ்கை கண்ணியப்படுத்துதல் இருக்கிறது  என்பதும் தெரிய வருகிறது , எனவே இந்த அமல்களுக்கு இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக நன்மை கிடைக்கும் என்பதால்  இவற்றை பேணுதலோடு செய்ய வேண்டும் , இது குறித்து ஏற்படும் தேவையற்ற வெட்கத்தை களைய வேண்டும் , அந்த உணவு சுத்தப்படுத்த முடியாத அளவுக்கு ஆகி விட்டால் அது வேறு விஷயம் .

75,தும்மல் வந்தால் அல்லாஹ்வை புகழ்வதும் ,அதற்கு பதில் கூறுவதும்

                       ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள், அல்லாஹுத்தஆலா தும்மலை விரும்புகிறான் , கொட்டாவியை வெறுக்கிறான் , உங்களில் யாருக்கேனும் தும்மல் வந்தால்  الحَمْدُ لِلَّه கூறவும் ,அதை செவியுற்றவர் முந்திய நபருக்காக يَرْحَمُكَ اللَّه அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக என துஆ செய்வது கடமையாகும் ,புஹாரி
                 இவைகளெல்லாம் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வழமையாக செய்து வந்த இஸ்லாமிய நாகரீகத்தின் ஒழுக்கங்களாகும்  , ஆனால் கைசேதம் இன்று முஸ்லிம் மக்கள் இவற்றையெல்லாம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் , இவ்வொழுக்கங்களை மீண்டும் புதிப்பிக்க வேண்டியதும், வழமைப்படுத்த வேண்டியதும் காலத்தின் அவசியமாகும்.

76,அல்லாஹ்வின் மீது அச்சமும்,பயமும்

            அல்லாஹ்வின் கண்ணியத்திற்கான உரிய மரியாதை யாதெனில் அவனின் அதிருப்தியை விட்டு பயந்து கொண்டே இருக்க வேண்டும் , அல்லாஹ்வின் அதிருப்தியை விட்டு அச்சப்படுவது குறித்து  குர்ஆனிலும், ஹதீஸிலும் ஏராளமான சிறப்புகள் கூறப்பட்டுள்ளன , பல இடங்களில் அதை வலியுறுத்தவும் பட்டுள்ளது , அந்த அளவிற்கு இது சிறந்த அமலாகும் , நபி ஸல் அவர்களின் சிறிய தந்தை ஹஜ்ரத் அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள் நாங்கள் ஒரு தடவை நபி ஸல் அவர்களுடன் ஒரு மரத்தின் கீழே அமர்ந்திருந்தோம் , அதன் காய்ந்த இலைகள் அப்போது உதிர ஆரம்பித்தன , பசுமை  இலைகள் மட்டுமே  அதில் இருந்தன , நபி ஸல் கூறினார்கள்  இந்த மரத்திலிருந்து கிடைக்கும் பாடம் என்ன  மக்கள் சொன்னார்கள் அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவார்கள் , நபியவர்கள் சொன்னார்கள் இந்த மரம் முஃமினைப்போல , அவருக்கு அல்லாஹ்வின் அச்சம் வந்து விட்டால் அவரின் பாவங்கள் அவரை விட்டு உதிர்ந்து விடுகின்றன, நன்மைகள் மட்டும் அவரிடம் தங்கி விடும் .பைஹகீ , தர்கீப்
          அல்லாஹ்வுடைய அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்திக்கொள்ள அவனின் கண்ணியத்தையும் , ஆற்றலையும் சிந்தித்து பார்க்க வேண்டும் , முன் சமுதாய மக்களின் முடிவை நினைத்து பார்க்க வேண்டும் , குர்ஆனிலும், ஹதீஸிலும்  கூறப்பட்டிருக்கக்கூடிய பாவம் செய்தவர்களுக்கு நேர்ந்த வேதனைகளை யோசித்து பார்க்க வேண்டும் , இவ்வாறாக செயல் படுவதால் பாவங்களின் மீதும் , வரம்பு மீறுதலின் மீதும் மனிதன் கொண்டுள்ள தைரியத்திற்கு முடிவு ஏற்படும் , அதன் காரணமாக தக்வா உண்டாகும், அதுவே எல்லா நன்மைகளின் அடிப்படையாகவும், உலகு மறுஉலகின் வெற்றிக்கான ஒரே பாதையுமாகும் , அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை நல்கிடுவானாக ,ஆமீன்

77,அல்லாஹ்வுடன் ஆதரவும்,நல்லெண்ணமும் கொள்ளுதல்

                அல்லாஹுத்தஆலாவின் மீது அச்சம் , பயம் கொள்வதுடன் அவனின் கிருபையின் காரணமாக தனக்கு  நலவு ஏற்படும் என ஆதரவு வைப்பதும் மிகப்பெரும் அமலாகும் , ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
إِنَّ حُسْنَ الظَّنِّ بِاللَّهِ مِنْ حُسْنِ عِبَادَةِ اللَّه
அல்லாஹுத்தஆலாவுடன் நல்லெண்ணம் கொள்ளுதலும் அல்லாஹ்வுக்கு செய்யும் மிகச்சிறந்த வணக்கமாகும் . (திர்மிதீ)
ஒரு ஹதீஸே குத்ஸியிலே அல்லாஹுத்தஆலா கூறியதை நபி (ஸல்) கூறினார்கள்
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي
                        என் அடியான் என்னைப்பற்றி கொண்டிருக்கும் எண்ணத்தை பொறுத்து நான் அவனுடன் நடந்து கொள்கிறேன் , என்னை எங்கே நினைவு கூறுகிறானோ அங்கே நான் அவனுடன் இருக்கிறேன் .(புஹாரி,முஸ்லிம்)
           ஆக குர்ஆனிலும் ,ஹதீஸிலும் அல்லாஹ்வின் கருணையை முன் வைத்து நல்லாதரவு கொள்வதற்கு மிகப்பெரும் சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன , ஆனால் இதன் கருத்து யாதெனில் மனிதன் தன்னுடைய சக்திக்கு ஏற்றவாறு அல்லாஹ்வின் கட்டளைப்படி வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் , அவ்வாறு முயற்சித்தும் கூட தவறுகளோ , குறைகளோ ஏற்பட்டு விட்டால் அவை குறித்து அல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைக்க வேண்டும் , ஆனால் ஒருவர் தனது வாழ்வில் அல்லாஹ்வின் கட்டளைகளை விட்டு முற்றிலும் மறதியில் இருக்கின்றார் , தன்னுடைய சீர்திருத்தம் குறித்து சிந்தித்து கூட பார்ப்பதில்லை , தன்னை கடிவாளமில்லாதவராக , மனோஇச்சைகளுக்குப்பின் சுதந்திரமாக செல்ல அனுமதித்து விட்டு இத்தனை மறதியிருந்தும் கூட தன் பாவங்களெல்லாம் தானாகவே மன்னிக்கப்பட்டு விடும்  என ஆசையை வளர்த்துக்கொண்டிருப்பாரானால் இப்படிப்பட்ட மனிதரை ஹதீஸிலே அதிகம் கண்டிக்கப்பட்டுள்ளது
         சரியான முறை யாதெனில் தன்னுடைய சீர்திருத்தத்திற்கான சிந்தனையோடு ஒரு மனிதன் அல்லாஹ்வை அஞ்சுதல்  மற்றும் அவன் மீது  நல்லெண்ணம் கொண்டு அவனுடைய கருணையை ஆதரவு வைத்தல் ஆகிய இரண்டையும் சேர்த்து நடந்து கொள்ளும் விதத்தில் அச்சமும் , ஆதரவும் கலந்த ஒரு நிலை அவர் மீது ஏற்பட வேண்டும்.
         ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) அவர்கள் மரணதருவாயில்  இருந்த ஒரு வாலிபரிடம் சென்றார்கள் , என்ன உணர்கிறீர்கள் ? என கேட்க அவர் சொன்னார் , யாரசூலல்லாஹ் !  எனக்கு அல்லாஹுத்தஆலா மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது , அத்துடன் என்  பாவங்களைப்பற்றிய கலக்கமும் இருக்கிறது , நபியவர்கள் சொன்னார்கள் இது போன்ற சந்தர்ப்பத்தில் எந்த முஃமினுடைய உள்ளத்தில் இந்த இரண்டு விஷயங்களும் ஒன்று சேருமோ அல்லாஹுத்தஆலா அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறான் , அவருடைய பயத்திலிருந்து அவரை நிம்மதி படுத்துகிறான் , (திர்மிதீ)



No comments:

Post a Comment