Wednesday, October 3, 2018

துட்சமாக பார்க்கப்படும் நன்மைகள் 3


30, அண்டை வீட்டாருடன் நன்நடத்தை

            அல்லாஹத்தஆலா அண்டை வீட்டார்களுக்கு செய்யவேண்டிய சில கடமைகளை கூறியுள்ளான். நபி (ஸல்) கூறினார்கள்,
مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ
         ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் , அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை  குறித்து என்னிடம் அதிகம் வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள், முடிவில் அவரை சொத்திலும் பங்குதாரராக ஆக்கக்கூறிடுவாரோ என நான் எண்ணும் அளவுக்கு போய்விட்டேன்.
ஹஜ்ரத் அபூ சுரைஹ் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُحْسِنْ إِلَى جَارِه
          அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டவர் தன் அண்டை வீட்டாருடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளவும் (முஸ்லிம்)
ஹஜ்ரத் அபூ ஹ
ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِي جَارَه
          அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும் ஈமான் கொண்டவர் தன் அண்டை வீட்டாருக்கு இடைஞ்சல் தர வேண்டாம்.
          அண்டை வீட்டாருக்கு செய்யவேண்டிய மிகப்பெரிய கடமை தன்னுடைய எந்தவொரு செயலினாலும் தன்னால் அவருக்கு யாதொரு இடைஞ்சலும் ஏற்படக்கூடாது என்பதில் முழு கவனத்துடன் இருக்கவேண்டும். இதல்லாமல் தேவைப்படும்போது அவருக்கு உதவுதல், அவ்வப்போது அவருக்கு  அன்பளிப்பு ஏதேனும் தருதல் , அவருடைய சுக துக்கங்களில் பங்கெடுத்தல், இவையாவும் நன்மைக்கு காரணமானவைகளாகும். அவர் தேவையுள்ளவராக இருந்தால் அவருக்கான பொருளாதார உதவி செய்யவும் முன்வர வேண்டும், ஏனெனில் அண்டை வீட்டான் பொருளாதார, சமூக ரீதியாக தனக்கு சமமாக இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை, எனவே சில ஏழை மக்கள் தன் அருகாமையில் வசித்தால் அவர்களும் அண்டை வீட்டார்களே, அவர்களை பற்றி அறிந்து வைத்திருப்பது பிறர்களை காட்டிலும் தனக்கு மிக அவசியம் என்ற ரீதியில் அவர்களின் கடமைகள் அதிகம் உள்ளன. ஏதேனும் அண்டைவீட்டுக்காரன் பசித்தவனாக இருந்தால் அவருக்கு உணவளிப்பது  நன்மைக்குறிய காரியம் மட்டுமல்ல, கடமையாக இருக்கிறது. இவ்வாறே அண்டைவீட்டுக்காரர் முஸ்லிமல்லாதவராக இருந்தால் அப்போதும் அவர்களுடன் நன்நடத்தை மேற்கொள்ளவேண்டும், ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் வீட்டில் ஒரு தடவை ஆடு அறுக்கப்பட்டது அவர்கள் அண்டை வீட்டாரோ ஒரு யூதன், அப்படியிருந்தும் ஹஜ்ரத் இப்னு அவர்கள் பல தடவை அந்த யூத அண்டை வீட்டாருக்கு இறைச்சி அனுப்பும் படி வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள்.




31. சிரித்த முகமும், நற்குணமும்

               மக்களுடன் சிரித்த முகத்துடன், நற்குணத்துடன் நடந்துகொள்வது அல்லாஹ்வுக்கு பிரியமானதாகும். அதற்கும் கூலி கிடைத்துவிடுகின்றது. ஹஜ்ரத் அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْق
        நன்மையான எந்த காரியத்தையும் அற்பமாக கருதாதீர்கள், அது உங்களுடைய சகோதரனை முகமலர்ச்சியுடன் சந்தித்தலாக இருந்தாலும் சரி.
         இந்த
ஹதீஸில் நபி (ஸல்) பிறரை முகமலர்ச்சியுடன் சந்தித்தலையும் ஒரு நன்மை என குறிப்பிட்டுள்ளார்கள் , அத்துடன் எந்த நன்மையையும் சாதாரணமாக , கேவலமானதாக எண்ணாதீர்கள் என்றும் கூறியுள்ளார்கள் . இதன் பொருள் இதனாலும் கூட உங்களின் அமல்களின் பட்டோலையில் அதிகரிப்பு ஏற்படலாம் என்பதாகும் .
          ஹஜ்ரத் அபூதர்  (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
مَا شَيْءٌ أَثْقَلُ فِي مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ القِيَامَةِ مِنْ خُلُقٍ حَسَنٍ، وَإِنَّ اللَّهَ لَيُبْغِضُ الفَاحِشَ البَذِيء
 ஒரு முஃமினான அடியானின் தராசிலே மறுமை நாளில் நற்குணத்தை விட கனமான நன்மை என எதுவும் இருக்காது , மேலும் அல்லாஹத்தஆலா அருவருப்பாக பேசக்கூடியவனை, வீண் வம்பு பேசுபவனை விரும்பவதில்லை.
        ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) இடம் கேட்கப்பட்டது, மனிதனை மிக அதி]கமாக சுவனத்தில் கொண்டு சேர்க்கக்கூடிய அமல் எது? இறையச்சமும், நற்குணமும் என பதிலளித்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் ஹஜ்ரத் அபூ ஹ
ரைரா (ரலி), அவர்கள்  நபி (ஸல்) கூற்றை அறிவிக்கின்றார்கள்
أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا
பரிபூரண முஃமின் என்பவர் மிக அழகான குணம் கொண்டவரே.
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்

إِنَّ الْمُؤْمِنَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِم
       நிச்சயமாக ஒரு முஃமின் தன்னுடைய நற்குணத்தின் காரணமாக நோன்பு நோற்று நின்றுவணங்கக்கூடியவர் அடையக்கூடிய அந்தஸ்தை அடைந்துவிடுவார். அபூதாவூத்

       ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلاَقًا
        உங்களில் எனக்கு மிகப்பிரியமானவர், என்னுடன் மிக
நெருக்கமானவர் மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவர் உங்களில் சிறந்த நற்குணம் கொண்டவர்களே.
          இந்த
அனைத்து ஹதீஸ்களிலும் நற்குணத்தின் பெரும் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன, இவற்றிற்கு விரிவான கருத்துக்கள் இருந்தாலும் பிற மனிதர்களுடன் மலந்த முகத்துடன் நடந்துகொள்வது அதன் முக்கியமான பகுதியாகும் , அவற்றிற்கும் இந்த சிறப்புக்கள் பொருந்தும்.


32, சக பிரயாண தோழர்களுடன் நன்நடத்தை

           அல்லாஹத்தஆலா ,  வீட்டுக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கு அதிகமான உரிமைகள் வைத்துள்ளது போல் சக பிரயாண தோழர்களுக்கும் செய்ய வேண்டிய உரிமைகளை கூறியுள்ளான். பிரயாண தோழர்கள் என்பதன் கருத்து முன்பு அவருடன் அறிமுகமே இல்லை , ஆனால் பிரயாணத்தில் சேர்ந்திருக்க நேரிட்டது , உதாரணமாக  பஸ்களில், ரயில்களில், விமானத்தில் அருகில் அமர்ந்து பிரயாணிப்பவர் , அவரை الصَّاحِبِ بِالْجَنْب என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதாவது சிறிது நேரத்திற்கு அருகாமை வாய்ந்த சகபிரயாண தோழர் என்பது இதன் பொருளாகும் , அவருக்கு செய்ய வேண்டிய கடமை தன்னுடைய எந்த செயலாலும் அவருக்கு சிரமம் உண்டாகக்கூடாது என்பதாகும் , சிலர் பிரயாணத்தில் தன்னுடைய வசதிக்காக  சகபிரயாணிகளுக்கு தொந்தரவு தந்துகொண்டே இருப்பார்கள், ஆனால் சிந்திக்க வேண்டிய விஷயம் பிரயாணமோ ஒரு சுருக்கமான நேரம்தான் இருக்கப்போகிறது , அது எப்படியாவது முடிந்துபோகும் . ஆனால் தன்னுடைய ஏதாவது செயலால் சக பிரயாண தோழருக்கு அநியாயமாக ஏதேனும் துன்பம் ஏற்படுமானால் அதன் கடுமையான பாவம் நிரந்தரமாக தன்னுடைய செயல்களின் பட்டோலையில் பதியப்பட்டுப்போகும், மேலும் இந்த பாவம் அடியார்களின் உரிமையோடு தொடர்புள்ளதால் அந்த சகபிரயாணி மன்னிக்காமல் தவ்பா செய்து அல்லாஹ்விடமும் மன்னிப்பை பெற முடியாது. பெரும்பாலும் பிரயாணத்தில் சந்திப்பவர்களோடு மீண்டும் சந்திப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும்  அமைவதில்லை, அவர்களின் முகவரியும் தெரிவதில்லை. அது தெரிந்தாலல்லவா அவர்களிடம் தனது தவறுக்கு மன்னிப்பு வேண்டமுடியும்? எனவே பிரயாணம் முடிந்த பின் தன் தவறுக்கான மன்னிப்பை வேண்டுவதற்கு பெரும்பாலும் வழி இருப்பதில்லை , இந்த விதத்தில் பார்த்தால் சக பிரயாண தோழருக்கு தொந்தரவு தருவதின் பாவம் மிகக்கடுமையானது. அதற்கு மன்னிப்பு பெருவது மிகவும் சிரமமாகும். மற்றொரு புறம் சகபிரயாண தோழருடன் நன்நடத்தை மேற்கொண்டால் முடிந்தவரை விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் மேலும் அவருக்கு சுகம், ராஹத் தருவதற்கு முயற்சித்தால் அல்லது குறைந்தபட்சம் அவருடன் முகமலர்ச்சியுடன் நடந்து கொண்டால் இது மிகவும் நன்மைக்குறிய செயலாகும், சிறிது கவனத்தினால் நன்மையின் ஒரு பெரிய குவியலை தனக்காக குவித்துவிடலாம்.



33. அல்லாஹ்வுக்காக சந்தித்தல்

         முஸ்லிமான ஒருவரை அல்லாஹ்வின் சந்தோசத்திற்காக வேண்டி மட்டும் சந்திக்க செல்வதும் பெரும் சிறப்பிற்குறிய அமலாகும், அல்லாஹ்வுக்காக வேண்டி செல்லுதல் என்பதன் பொருள் அவரோடு சந்திப்பதில் வேறு எந்த உலக இலாபம் பெறுவதும் நோக்கமாக இருக்கக்கூடாது , மாறாக அவர் நல்ல மனிதராக இருக்கிறார், அல்லது ஆலிமாக இருக்கின்றார், அல்லது அவரது சகவாசத்தில் தன்னுடைய சீர்திருத்தம் இருக்கிறது என்பது போன்ற காரணங்களுக்காக  சந்திக்கவேண்டும் , அல்லது அவருடைய மனம் சந்தோசப்படவேண்டும், ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தை சந்தோசப்படுத்துவதால் அல்லாஹ் மகிழ்ச்சியடைகிறான் என்ற நோக்கிலே சந்திக்கவேண்டும் . இந்த நிலையில் சந்திக்கும் சந்திப்பு கூட அல்லாஹ்வுக்காக என்றே கருதப்படும் , இன்ஷா அல்லாஹ்  அதற்கும் கூலி கிடைக்கும்.
           ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள் ,
مَنْ عَادَ مَرِيضًا أَوْ زَارَ أَخًا لَهُ فِي اللهِ نَادَاهُ مُنَادٍ أَنْ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنَ الجَنَّةِ مَنْزِلاً
             எவர் நோயாளியை நலம் விசாரிப்பாரோ அல்லது தன்னுடைய சகோதரனை அல்லாஹ்வுக்காக சந்திப்பாரோ அவரை நோக்கி ஒரு அழைப்பாளர் நீயும் மாண்படைந்துவிட்டாய், உன்னுடைய நடையும் மாண்படைந்து விட்டது, மேலும் சுவனத்ததில் ஒரு இடத்தை நீ தனதாக்கி கொண்டாய் என கூறுகிறார் (திர்மிதி)
              இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது , முஸ்லிமான ஒருவரை  நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் சந்தித்தாலும் கூட அமல்களின் பட்டோலையில் நன்மைகளை அதிகரித்துக்கொள்ளலாம், இருப்பினும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளவேண்டும் , யாரை சந்திப்பதால் தன்னுடைய தீனுக்கு இடைஞ்சல் ஏதும் வராதோ அவரை சந்திப்பதற்குத்தான் மேற்கண்ட கட்டளை கூறப்பட்டுள்ளது, இதற்கு மாற்றமாக அவரை சந்திப்பதின் விளைவாக தான் ஏதேனும் பாவத்தில் சிக்க நேரிடும், அல்லது அவரின் தீய சகவாசத்தால் தன் மீது தப்பான பிரதிபலிப்பு உண்டாகும் , அல்லது புறம் பேசவோ, கேட்கவோ வேண்டிய சூழ்நிலை ஏற்படும், அல்லது பலனில்லாத பேச்சுக்களால் அதிக நேரம் வீணாகிப்போகும் என்றெல்லாம் ஐயமிருக்குமானால் இப்படிப்பட்ட சூழலில் இத்தகைய சந்திப்பு மற்றும் சகவாசத்திலிருந்து தவிர்ந்து கொள்வதே சிறந்ததாகும் .


34. விருந்தாளிகளை உபசரித்தல்

                விருந்தாளிகளை உபசரிப்பதும், முறையாக அவர்களை  கண்ணியப்படுத்துவதும் ஈமானுடைய கிளைகளில் முக்கியமான கிளையாகும், இது  குறித்து இஸ்லாத்தில் மிகவும் வலியுருத்தப்பட்டுள்ளது, ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்,
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ
                அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டவர் தன் விருந்தாளியை கண்ணியப்படுத்தி உபசரிக்கவும்.
                    விருந்தாளியை  கண்ணியப்படுத்துவது என்பதன் பொருள் முக மலர்ச்சியோடு அவரை வரவேற்கவேண்டும், உணவருந்தும் நேரமாக இருந்தால் சக்திக்குட்பட்ட அளவு  அவருக்கு உணவளித்து உபசரிக்க வேண்டும் , மாறாக ஹதீஸில் கூறியுள்ள படி விருந்தாளிகளுக்கு செய்யவேண்டிய கடமை யாதெனில் தன்னால் இயன்றால் முதல்நாளில் அவருக்காக விசேஷ உணவு தயாரிக்க  வேண்டும் அவ்வளவுதான் , ஹதீஸிலே அதை ஜாயிஸா என கூறப்பட்டுள்ளது . (புஹாரி)
              ஆனால் இந்த உபசரிப்புகள் யாவற்றிலும் வெரும் சடங்குகளுக்காக செய்வது ,  பேர், புகழ், பகட்டுகள் ஆகியவற்றுக்காக செய்வது ஆகிய போக்கை  தவிர்ந்து கொள்ளவேண்டும். விருந்தாளியை கண்ணியப்படுத்துவதின் முதல் அர்த்தம் அவருக்கு எவ்வாறு நிம்மதியூட்டுவது என சிந்திப்பதாகும் , எனவே அவருக்கு சாப்பிடுவதில் சிரமம் இருந்தால் சடங்குக்காக அவரை சாப்பிட வற்புறுத்துவது உபசரிப்புக்கு எதிரானதாகும், இப்படியான சந்தர்ப்பத்தில் அவருடைய வசதியையும் எதிர்ப்பார்ப்பையும் கவனத்தில் வைப்பதே  அவரை உபசரிப்பதாகும் .
           மற்றொரு புறம் விருந்தாளியின் கடமை யாதெனில்  அவர் விருந்து உபசரிப்பவர் மீது தேவையில்லாத பாரத்தை போடக்கூடாது, மேலும் அவருக்கு சுமையாக தெரியும் அளவுக்கு அவரிடம் தங்கக்கூடாது. ஸஹீஹ் முஸ்லிமின் கிரந்தத்தில் இதை தெளிவாகவே தடைசெய்யப்பட்டுள்ளது.


35, பாதையை விட்டு இடர்தரும் பொருளை அகற்றுதல்

               பாதையில் ஏதேனும் அசுத்தம் கிடந்தால் , அல்லது கடந்து செல்பவருக்கு தொந்தரவு ஏற்படும் என்ற அச்சம் தரும் பொருள் கிடந்தால் , அல்லது  ஏதேனும் முள் , இடறி விடும் பொருள் , வழுக்கிவிழும் பழத்தோல்  என ஏதாவது ஒன்று பாதையில் விழுந்து கிடந்தால் அதை பாதையிலிருந்து அகற்றுவதும் பெரும் நன்மைக்குறிய செயலாகும், ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ
              ஈமானுக்கு எழுபது சொச்ச கிளைகள் உள்ளன , அவற்றில் மிக சிறந்தது லாயிலாஹ இல்லல்லாஹ் என கூறுவதாகும். மிகச்சிறியது பாதையிலிருந்து இடர்தரும் பொருளை அகற்றுவதாகும். (புஹாரி, முஸ்லிம்)
            இன்னொரு ஹதீஸிலே நபி (ஸல்) அவர்களின் கூற்றை ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) கூறுகிறார்கள்
يُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ
          பாதையை விட்டு இடர்தரும் பொருளை அகற்றுவதும் தர்மமாகும்.
         ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
إِنَّهُ خُلِقَ كُلُّ إِنْسَانٍ مِنْ بَنِي آدَمَ عَلَى سِتِّينَ وَثَلَاثِمِائَةِ مَفْصِلٍ، فَمَنْ كَبَّرَ اللهَ، وَحَمِدَ اللهَ، وَهَلَّلَ اللهَ، وَسَبَّحَ اللهَ، وَاسْتَغْفَرَ اللهَ، وَعَزَلَ حَجَرًا عَنْ طَرِيقِ النَّاسِ، أَوْ شَوْكَةً أَوْ عَظْمًا عَنْ طَرِيقِ النَّاسِ، وَأَمَرَ بِمَعْرُوفٍ أَوْ نَهَى عَنْ مُنْكَرٍ، عَدَدَ تِلْكَ السِّتِّينَ وَالثَّلَاثِمِائَةِ السُّلَامَى، فَإِنَّهُ يَمْشِي يَوْمَئِذٍ وَقَدْ زَحْزَحَ نَفْسَهُ عَنِ النَّارِ
          மனிதர்களில் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் 360 இணைப்புகள் படைக்கப்பட்டுள்ளன, எனவே எவர் தக்பீர் கூறுவாரோ, அல்லாஹ்வை புகழ்வாரோ, லாயிலாஹ இல்லல்லாஹ், சுப்ஹானல்லாஹ் கூறுவாரோ, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவாரோ அல்லது மக்கள் நடமாடும் பாதையை விட்டு ஏதேனும் கல்லை அகற்றுவாரோ, அல்லது ஏதேனும் முள்ளை, எலும்பை பாதையை விட்டு அகற்றுவாரோ அல்லது ஏதேனும் நன்மையை ஏவுவாரோ, தீமையை விட்டு தடுப்பாரோ இது போன்ற நற்காரியங்கள் 360 வரை வந்துவிட்டால் அவர் அந்த நாளில் தன்னை நரக வேதனையை விட்டும் தற்காத்துக்கொண்டவராக நடமாடுகிறார்.
           மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) ஒரு சம்பவத்தை விவரித்தார்கள் ஒருவர் பாதையில் நடந்து சென்றபோது முள் கிளை ஒன்று பாதையில் கிடக்க கண்டார்.  அதனால் மக்களுக்கு இடைஞ்சல்  ஏற்படுவதை  விட்டு பாதுகாப்பதற்காக அதை பாதையிலிருந்து அகற்றினார், அல்லாஹத்தஆலாவுக்கு  அவருடைய அந்த செயல் பிடித்துப்போனது , எனவே அல்லாஹ் அந்த அமலை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்துவிட்டான், மற்றொரு அறிவிப்பில்  நபி (ஸல்) கூறினார்கள் , நான் அந்த மனிதரை சுவனத்தில் நடமாட கணடேன்.(முஸ்லிம்)
          இந்த ஹதீஸ்களிலிருந்து தெளிவாகிறது , பாதைகளை சுத்தமாக வைப்பதற்கும் , மக்களை சிரமங்களிலிருந்து பாதுகாப்பதற்கும் இஸ்லாத்தில் எத்தனை முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது , ஒரு முள் கிளையை பாதையிலிருந்து அகற்றுதல் என்பது பார்ப்பதற்கு  மிக சாதாரணமான  ஒரு அமலாக தெரிகிறது , இதற்கே இத்தனை கூலியும் , நன்மையும்  வாக்களிக்கப்பட்டுள்ளது மேலும் தொந்தரவு தரும் பொருளை அகற்றுவதற்கு இந்த அளவு மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது  என்றால் பாதையை அசுத்தப்படுத்துவதும், கடந்து செல்பவர்களுக்கு   தொந்தரவு தருவது போல அசிங்கப்படுத்துவதும் எத்தனை கொடிய பாவம் என்பதையும் நாம் அனுமானித்துக்கொள்ளலாம் . பாதையில் செல்பவர்களுக்கு தொந்தரவு தருதல் என்பதில் தன்னுடைய பைக், கார் போன்ற வாகனத்தை பிறவாகனங்களின் பாதை மறிக்கப்படும் வகையில் நிறுத்தி வைப்பது , அல்லது அவைகள் செல்வதில் சிரமம் ஏற்படும் வகையில் நிறுத்துவது அல்லது பிறருக்கு ஏதாவது வகையில் சிரமம்தரும் விதத்தில் வாகனத்தை முறை தவறி ஓட்டுவது ஆகியவை யாவும் அடங்கும், இவையாவும் பாவங்களாகும் இவைகளை விட்டு பிற பெரும்பாவங்களை விட்டு தவிர்வது போல தவிர்ந்து கொள்ள வேண்டும்.
             இதே போல போக்குவரத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டதின் நோக்கம் சாலைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதாகும், அது  ஒரு தீன் சார்ந்த கடமையாகவும் இருக்கிறது , அவற்றை பேணுவதால் சமூகத்தில் ஒழுங்குமுறை ஏற்படும், மக்களுக்கு நிம்மதி உண்டாகும், அவர்களை சிரமங்களிலிருந்து, உயிர் ,பொருள் சேதங்களிலிருந்து  பாதுகாப்பதில் முடிந்தளவு நாம் செய்யும் முயற்சியாகிப்போகும் என்ற எண்ணத்தோடு இவற்றை செயல்படுத்துவோமேயானால் இவை யாவற்றிற்கும்  இன்ஷா அல்லாஹ் நன்மையும் , கூலியும் கிடைக்கும், மேலும் இந்த விதிகள் மீறப்பட்டால் அதனால் இரட்டிப்பு பாவம் உண்டாகும், ஒன்று மக்களுக்கு சிரமத்தை தருதல் என்ற பாவம் , இரண்டாவது ஒழுங்கமைப்பில் குறையை ஏற்படுத்தி, ஆட்சியாளர்களின்  சட்டங்களை மீறுதல் என்ற  குற்றம்.
            ஆனால் கைசேதம்! இன்று  இவைகளெல்லாம்  பாவமாகவே  கருதப்படுவதில்லை, நல்ல நல்ல தீன்தாரிகளும்,படித்த மனிதர்களும்  கூட இவ்வகையான பாவங்களில் எக்கச்சக்கமாக மூழ்கி உள்ளார்கள், அல்லாஹத்தஆலா நம் யாவருக்கும் தீனுடைய சரியான விளக்கத்தையும், அதன் மீது அமல் செய்வதற்கான தவ்ஃபீக்கையும் தருவானாக, ஆமீன்!


36, சண்டையிடுவதை தவிர்த்தல்

                  சண்டையிடுவது, சச்சரவு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான செயலாகும், குர்ஆனிலே சண்டையிடும் மனிதனைப்பற்றி மிகவும் இகழ்ந்து கூறப்பட்டுள்ளது, இதற்கு நேர்மாற்றமாக சகிப்புத்தன்மை, பொறுமை, சண்டையிடுவதை தவிர்த்தல் ஆகிய பண்புகள் கொண்ட மனிதரை அல்லாஹ் பிரியப்படுகிறான், மேலும் இத்தகைய மனிதருக்கு நன்மையும், கூலியும் தருகிறான்,  ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள், ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் கோத்திரத்தாரைச்சார்ந்த ஒரு நபரிடம் பேசும்போது கூறினார்கள்
إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللهُ: الْحِلْمُ، وَالْأَنَاةُ
உங்களுக்குள் இரு குணங்கள் உள்ளன அவற்றை அல்லாஹ் நேசிக்கிறான், அவை  சகிப்புத்தன்மையும், நிதானமும். ஸஹீஹ் முஸ்லிம்
           எனவே ஒருவர் சத்தியத்தின் மீது இருந்தும் கூட சச்சரவையும், சண்டையையும் தவிர்க்கவேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுப்பாரானால்  அல்லது எதிராளியுடன் சமாதானம் செய்து கொள்வாரானால் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மிகப்பெரிய சுபச்செய்தியை கூறியுள்ளார்கள்.
          ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்,
أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا
           தான் சத்தியவாதியாக இருந்தும் எவர் சச்சரவு செய்யாமல் ஒதுங்கிக்கொள்வாரோ அவருக்கு சுவனத்தின் ஓரங்களில் வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பு. அபூதாவூது
            எவரை சுவனத்தில் சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல் சுவனத்தில்  அவருக்கு குடியிருப்பு வாங்கி தருவதற்கும் நபி (ஸல்) பொறுப்பெடுத்துக் கொண்டார்களோ அவரின் நற்பாக்கியத்தை என்னவென்று கூறுவது?  அல்லாஹ் இந்த பாக்கியத்தை அனைத்து முஸ்லிம்களுக்கும் தருவானாக. ஆமீன்


37. தீனுடைய விஷயத்தை கற்றல்

            தினசரி வாழ்க்கையை இஸ்லாமிய போதனை படி வாழ்வதற்கு எந்த அளவு தீனுடைய விளக்கம் தேவையோ அவ்வளவு விளக்கத்தை பெறுவது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும்,எல்லோருமே  முழுமையாக முறைப்படி தீனுடைய ஆலிமாக ஆக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இருப்பினும் தேவையான அளவுக்கு தீனுடைய கல்வியை பெறுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீது ஃபர்ள் அய்னாகும். உதாரணமாக தொழுகை, நோன்பு, ஹஜ் இன்னும் ஜகாத்துடைய அவசியமான சட்டங்கள், அவரின் வாழ்வில் ஏற்படக்கூடிய வகையிலான கொடுக்கல், வாங்கல் குறித்த ஹலால், ஹராம், கூடும், கூடாது போன்ற சட்டதிட்டங்கள் ஆகியவைகளாகும் .
             அல்லாஹத்தஆலா தீனுடைய தேவையான விஷயங்களை கற்பது கட்டாயம் என கூறியிருப்பதோடு அந்த அமலுக்காக  பெரிய பெரிய கூலியையும், நன்மையையும் வாக்களித்துள்ளான், அதாவது தீனை கற்பதின் ஒவ்வொரு அமலும் ஒரு தனி நன்மையான செயலாகும், அதற்கும் அதிகமான சிறப்புகள் குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்துள்ளன. ஹஜ்ரத் அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்

مَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا إِلَى الجَنَّةِ، وَإِنَّ الْمَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضَاءً لِطَالِبِ العِلْمِ
               எவர் தீனுடைய ஒரு கல்வியை தேடி ஒரு பாதையில் நடைபோடுவாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை எளிதாக்கிவிடுவான் , மேலும் கல்வியை தேடும் மாணவருக்காக அவருடைய அமலின் மீது தன்னுடைய திருப்தியை வெளிப்படுத்தும் விதமாக  மலக்குகள் தம் இறக்கையை விரிக்கின்றார்கள்.
           இந்த சிறப்பிலே வீட்டை விட்டு வெளியேறி  முறையாக தீனுடைய இல்மை தேடும் மாணவர்கள் தானாகவே வந்துவிடுவார்கள், இருப்பினும் எவர் தீனுடைய முழுமையான ஆலிமாகும் எண்ணமில்லாமல் தன்னுடைய தேவைக்கு தகுந்த தீனுடைய ஏதேனும் விளக்கத்தை தெரிவதற்காக  எங்கேனும் செல்வார்களோ, அல்லது தேவையான நேரத்தில் ஏதேனும் ஆலிமிடம் அல்லது முஃப்தியிடம் சட்டம் கேட்பதற்காக செல்கிறார்களோ, அல்லது தீனுடைய விஷயத்தை கற்க போகிறோம் என்ற எண்ணத்தில் ஏதேனும் பயானில், உபதேசத்தில் பங்கெடுக்கின்றார்களோ அவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் இந்த சிறப்பில் பங்குண்டு. ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللهِ حَتَّى يَرْجِعَ
       கல்வியை தேடி எவர் புறப்படுவாரோ அவர் திரும்பும் வரை அல்லாஹ்வுடைய பாதையில் இருப்பார்.
           ஆக தீனுடைய எந்த ஒரு விஷயத்தையும் கற்பதற்காக எந்த ஒரு முயற்சி மேற்கொண்டாலும் இன்ஷா அல்லாஹ் அதற்காக இல்மை தேடிய கூலியும், நன்மையும் கிடைக்கும் , எந்தளவுக்கென்றால் இந்த நோக்கத்தில் ஆதாரப்பூர்வமான தீனுடைய கிதாபுகளை படிப்பதிலும் இதே நன்மையை ஆதரவு வைக்கலாம், ஆனால் அந்த நூல் ஆதாரப்பூர்வமாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்,  அதற்கு பொருத்தமான வழி ஏதேனும் சிறந்த ஆலிமிடம் கேட்டு படிக்க வேண்டிய நூல்களை தேர்வு செய்யவேண்டும், எனவே ஏதேனும் தீனுடைய ஒரு விஷயத்தை எங்கிருந்து கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை பாக்கியமாக கருதவேண்டும். இதனால் தன்னுடைய கல்வியும் வளரும், வாழ்விலும் மலர்ச்சி உண்டாகும், நன்மைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் , ஏனெனில் கல்வி என்பது கரை காண முடியாத கடலாகும், அதற்கு எல்லையே கிடையாது, மனிதன் எவ்வளவு பெரிய ஆலிமாகி விட்டாலும் அதிக கல்வியின் தேட்டம் அவருக்கு இருந்து கொண்டே இருக்கும். இருக்க வேண்டும் , எனவேதான் ஹதீஸில் வருகிறது எவர் கல்வியில் பேராசை கொண்டிருப்பாரோ அவருடைய வயிறு ஒருபோதும் நிரம்பாது, அதாவது அவர் ஒவ்வொரு நிலையிலும் இன்னும் அதிகமான கல்வியின் தேடலில் இருப்பார், நன்மைகளை அடையும் இந்த தொடர் ஒருபோதும் முடிவடையாது.


38, தீனுடைய விஷயத்தை கற்றுக்கொடுத்தல்

           தீனுடைய விஷயத்தை கற்பது பெரிய நன்மைக்குறிய அமலாக இருப்பதைப்போல யாருக்கேனும் தீனுடைய விஷயத்தை கற்று தருவது அதை விட அதிகமான சிறப்பு கொண்ட அமலாகும், ஆனால் ஒரு நிபந்தனை அதன் நோக்கம் தனக்கு தெரிந்ததை  காட்டுவதோ , தன்னுடைய பெருமையை வெளிப்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது, மாறாக பிறருக்கு பலனை தருவது என்பதே நோக்கமாக இருக்கவேண்டும் , ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الخَيْرَ
            அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும், வானம், பூமியிலுள்ள படைப்புகளும், புற்றுகளிலுள்ள எறும்புகள் உட்பட மீன்கள் உட்பட மக்களுக்கு நலவுகளை கற்றுத்தருபவருக்காக அருள் வேண்டி பிராத்திக்கின்றன,திர்மிதீ
         ஹஜ்ரத் ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்  ஹஜ்ரத் அலி (ரலி) வுடன் பேசும்போது கூறினார்கள்
لَأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
            அல்லாஹ் உங்கள் மூலம் ஒருவருக்கு நேர்வழிக்காட்டினாலும் அது உங்களுக்கு சிகப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைக்காட்டிலும் மிக சிறந்ததாகும் .  புகாரி , முஸ்லிம்
         சிகப்பு ஒட்டகம் அரபகத்தில் பெரிய சொத்தாக பார்க்கப்பட்டு வந்தது எனவே இதன் கருத்து உங்களுடைய கற்றுக்கொடுத்தல் மற்றும் தர்பியத்தின் காரணமாக யாரேனும் ஒருவருக்கு நேர்வழி கிடைத்து விட்டாலும் இது உங்களுக்கு மிகப்பெரிய சொத்து கிடைப்பதைக்காட்டிலும் மிக சிறந்தது என்பதாகும் .
         எனவே யாருக்கேனும் தீனுடைய விஷயத்தை சொல்லித்தருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் அதை பாக்கியமாக கருதி இந்த சிறப்பை அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக தன் வீட்டினர்களுக்கு மனைவி, மக்களுக்கு தீனுடைய விஷயத்தை கற்றுக்கொடுத்துகொண்டே  இருக்கவேண்டும் , இது மனிதனுக்கான நிலையான தர்மமாகும்.


39, பெரியவர்களுக்கு கண்ணியம் செய்தல்

            இஸ்லாமிய போதனையின் படி பார்க்கப்போனால் உண்மையில் இறையச்சத்திற்கும், கல்விக்கும்தான் சிறப்புண்டு. இருப்பினும் அத்துடன் சிறு வயதினர்களுக்கான கட்டளை அவர்கள் தன்னை விட வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை தரவேண்டும் என்பதாகும் ,   எந்தளவுக்கென்றால் நபி (ஸல்) கூறினார்கள்
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ شَرَفَ كَبِيرِنَا
            நம்மில் சிறுவர் மீது இரக்கம் காட்டாதவரும், பெரியவரின் சிறப்பை விளங்காதவரும் நம்மைச்சார்ந்தவரல்ல (அபூதாவூது, திர்மிதி)
           குறிப்பாக
முடி நரைத்தவரை  கண்ணியப்படுத்துபவருக்கு ஹதீஸிலே பெரிய சிறப்பு வந்துள்ளது , ஹஜ்ரத் அபூ மூஸா (ரலி) அறிவிக்கிறார்கள்,  நபி (ஸல்) கூறினார்கள்
                      إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ       
            முடி நரைத்த ஒரு முஸ்லிமை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதை சார்ந்ததாகும்.
             ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلاَّ قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ
           எந்த ஒரு வாலிபரும் ஒரு வயோதிகரை அவருடைய வயதை முன்வைத்து கண்ணியப்படுத்தினால் அவருடைய வயோதிகத்தில் அவரை கண்ணியப்படுத்துபவரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.திர்மிதீ
           நபியவர்களின் வழமையாதெனில் ஏதேனும் குழுவில் வயதில் இளையவர், தன்னை விட மூத்தவரை முந்திக்கொண்டு பேச ஆரம்பித்தால் மூத்தவர்களை முதலில் பேச விடும்படி வலியுறுத்துவார்கள். இதிலிருந்து பெரியவர்களுக்கு கண்ணியம், மரியாதை தருவதற்கு நபியவர்கள் எந்தளவுக்கு வலியுறுத்தியுள்ளார்கள்  என்பதும் இதற்காக நிச்சயம் நன்மையும் கூலியும் கிடைக்கும் என்பதும் தெளிவாகிறது.

40, இஸ்லாமிய சின்னங்களை கண்ணியப்படுத்துதல்

                  இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் அடையாளமாக கருதப்படுபவைகள் யாவும் இஸ்லாமிய சின்னம் என கூறப்படும். உதாரணமாக குர்ஆன், பைத்துல்லாஹ், பள்ளிவாசல்கள், புனித ஸ்தலங்கள், தொழுகை பாங்கு போன்றவை . இந்த சின்னங்களை கண்ணியப்படுத்துவதும் மிகப்பெரிய நன்மையாகும் அல்லாஹ் கூறுகிறான்
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
            அல்லாஹ்வின் சின்னங்களை எவர் கண்ணியப்படுத்துவாரோ அவரின் அந்த செயல் உள்ளங்களிலுள்ள இறையச்சத்தின் காரணமாகும்.


41, சிறுவர்கள் மீது இரக்கம் காட்டுதல்

           சிறியவர்கள் மீது இரக்கம் காட்டுதல் நபியவர்களின் சுன்னத்தாகும், முன்பே ஹதீஸில் கூறப்பட்டது , நபியவர்கள் சொன்னார்கள் , நம்மில் சிறியவர் மீது இரக்கம்காட்டாதவர் நம்மைச்சார்ந்தவரல்ல
.      ஹதீஸில் வருகிறது , நபி (ஸல்) கூறினார்கள் , நான் தொழவைக்கும்போது ஏதேனும் குழந்தை அழும் சப்தத்தை கேட்டால் தொழுகையை சுருக்கிக்கொள்கிறேன் , அந்த குழந்தையின் தாய் அந்த குழந்தையின் அழும் சப்தத்தை செவியுற்று கலக்கமுற்று விடக்கூடாது என்பதால்.
       நபி (ஸல்) சிறு பிள்ளைகளை மடியில் சுமப்பார்கள், அவர்கள் மீது பாசம் வைப்பார்கள் , அவர்களுடன் தமாஷாக
பேசுவார்கள், இவை யாவும் சுன்னத்களாகும், சுன்னத்தை பின்பற்றுதல் என்ற எண்ணத்துடன் இந்த அனைத்து காரியங்களையும் செய்வதில் மிகப்பெரிய நன்மையும், கூலியும் இருக்கிறது.


42, பாங்கு சொல்லுதல்

              பாங்கு இஸ்லாமிய சின்னங்களில் ஒன்றாகும் , ஹதீஸ்களில் பாங்கு சொல்வதற்கு அதிகமான சிறப்புகள் வந்துள்ளன, புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸில் நபியவர்கள் கூறினார்கள் , மக்களுக்கு பாங்கு சொல்வதால் கிடைக்கும் நன்மை முழுமையாக தெரிந்து விடுமானால் ஒவ்வொருவரும் பாங்கு கூற முயற்சிப்பார்கள் , பாங்கு கூற விரும்புபவர்கள் அதிகமாக இருப்பர் என்பதால் சீட்டு குலுக்கிபோட்டு தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகிவிடும்.
           இன்றைய காலத்தில் பெரும்பாலும் பள்ளிகளில் முஅத்தின் நியமிக்கப்பட்டிருப்பார்கள் , ஆனால் பள்ளி அல்லாத வேறு எங்கேனும், அல்லது பாங்கு சப்தம் வந்தடையாத வேறு எங்கேனும் தொழுதால் அங்கேயும் தொழுகைக்கு முன்னர் பாங்கு சொல்வது சுன்னத்தாகும் , இத்தகைய சந்தர்ப்பங்களிலாவது  பாங்கு சொல்வதற்கான இச்சிறப்பை கண்டிப்பாக அடைய முயற்சிக்க வேண்டும்.
           ஹஜ்ரத் அபூ ஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் ஒரு தடவை  அப்துர் ரஹ்மான் இப்னு ஸஃஸஆ (ரலி) வுடைய மகனார் அப்துல்லாஹ்விடம் கூறினார்கள் , உங்களுக்கு ஆடுகளோடும், பாலைவனங்களோடும் அதிக தொடர்பிருப்பதை காண்கிறேன் , எப்போதாவது நீங்கள் ஆடுகளுக்கு மத்தியில், பாலைவனத்தில் இருக்க நேரிட்டு தொழுகை தொழ வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அப்போது பாங்கு சொல்லுங்கள், அதுவும் உயர்ந்த தொனியில் சொல்லுங்கள், ஏனெனில் முஅத்தினுடைய பாங்கோசை எங்குவரை சென்றடையுமோ அங்குள்ள ஜின்கள் , மனிதர்கள், பிற வஸ்துகள் என அச்சப்தத்தை செவியுறும் யாவும் மறுமை நாளில் பாங்கு கூறியவருக்காக சாட்சியம் அளிக்கும் என்று இதை கூறிவிட்டு ஹஜ்ரத் அபூ ஸயீத் குத்ரி (ரலி) மேலும் கூறினார்கள் நான் இதை நபியவர்கள் கூற கேட்டுள்ளேன் என்றார்கள் . (புஹாரி)
           பாங்கு கூறுவது  எவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு அமல்  என்பதை இதிலிருந்தே அனுமானித்துக்கொள்ளலாம் ,எனவே சந்தர்ப்பம் அமையும்போது இந்த சிறப்பை அடைவதில் குறை செய்து விடக்கூடாது.


43, பாங்குக்கு பதில் சொல்லுதல்

               பாங்கு சொல்லிக்கொண்டிருக்கும்போது  முடிந்தவரை மௌனமாகிவிட வேண்டும்  என்பதுதான் பாங்குக்கான ஒழுக்கமாகும் , நபி (ஸல்) அவர்கள்   பாங்குடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் தரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள் , அதாவது முஅத்தின் கூறும் வார்த்தையையே கேட்பவரும் கூறவேண்டும், ஆனால் حَيَّ عَلَى الصَّلاَة , حَيَّ عَلَى الْفَلَاح கூறும்போது அந்த வார்த்தைகளின் பதிலில்   لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ    கூறவேண்டும் ,ஃபஜ்ருடைய பாங்கில் முஅத்தின் الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْم  கூறும் போது صَدَقْتَ وَبَرِرْتَ என கூறவேண்டும்.
              ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் , பாங்கு சப்தத்தை நீங்கள் கேட்டால் முஅத்தினைப்போல நீங்களும் அதே வார்த்தையை கூறுங்கள் , பின்னர் என் மீது ஸலவாத் ஓதுங்கள் , ஏனெனில் என் மீது எவர் ஒருமுறை ஸலவாத் கூறுவாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை கிருபை செய்கிறான் , பின்னர் அல்லாஹ்விடம் எனக்காக வஸீலாவை கேளுங்கள் , ஏனெனில் வஸீலா என்பது சுவனத்தின் ஒரு பதவியாகும் , அது அல்லாஹ்வின் அடியார்களில் யாருக்கேனும் ஒருவருக்குத்தான் கிடைக்கும் , அந்த அடியான் நானாக இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது , எனவே எவர் எனக்காக வஸீலாவுடைய துஆ செய்வாரோ அவருக்காக பரிந்துரைப்பது  என் மீது கட்டாயமாகும். (முஸ்லிம்)
           இந்த சிறப்பை முன்வைத்துதான் பாங்குப்பிறகு நபியவர்கள் கற்றுந்தந்த துஆவில் நபியவர்களுக்காக வஸீலா வேண்டி செய்யும் துஆ இடம் பெற்றுள்ளது அந்த துஆ
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ القَائِمَةِ، آتِ مُحَمَّدًا الوَسِيلَةَ وَالفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
          ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) அவர்கள் பாங்குக்குப் பிறகு இந்த துஆவை ஓதுபவருக்கு மறுமை நாளில் தனது  பரிந்துரை கட்டாயமாகிவிடும் என்ற நற்செய்தியை கூறியுள்ளார்கள் . (புஹாரி)
           இதல்லாமல் பாங்குக்குப் பிறகு கீழ்கானும் வார்த்தைகளை கூறுவதும் அறிவிப்புகளில் வந்துள்ளது.
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلَامِ دِينًا
ஹஜ்ரத் ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) வுடைய ஒரு கூற்றை அறிவிக்கிறார்கள் , எவர் பாங்கை கேட்டுவிட்டு இந்த வார்த்தைகளை கூறுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் (முஸ்லிம்
        பாங்குக்குப் பதில் சொல்வதிலோ, பாங்குக்குப் பின் இந்த துஆவை ஓதுவதிலோ நேரமேதும் பிடிப்பதில்லை. பெரிய முயற்சியும் தேவைப்படாது, ஞாபகம் வைப்பதும், பழக்கத்தில், கொண்டு வருவது மட்டுமே தேவை. இந்த திக்ர்களை செய்வதின் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் எந்த விதமான நேரமோ, சிரமமோ இன்றி மனிதனுக்கு மிகப்பெரிய கூலியும், நன்மையும் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும் , எனவே பாங்கின்போது இந்த ஒழுக்கங்களை கவனத்தில் கொள்ளவேண்டும், ஏதேனும் தங்கடமிருப்பின் வேறுவிஷயம்.
இங்கே ஒரு விஷயத்தை நினைவில் வைக்கவேண்டும் , ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட
பள்ளிகளின் பாங்கோசை ஒன்றன்பின் ஒன்றாக கேட்டுக்கொண்டே இருந்தால் காதில் விழும் முதல் பாங்குக்கு பதில் சொன்னாலே போதும் , இந்த சுன்னத் நிறைவேறிவிடும் , பின்னர் கூறப்படும் பாங்குக்கு பதில் சொல்லாது போனாலும் அது குற்றமாகாது. (ஷாமி)


44, குர்ஆன் ஓதுதல்

                  புனித குர்ஆன் முழு மனிதத்துவத்திற்கும் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய வெகுமதியாகும் , அதற்கான உண்மையான கடமை அதன்படி அமல்செய்வதாகும் , இருப்பினும் அல்லாஹத்தஆலா தன் அடியார்களுக்கு தன் அருளை தருவதற்கான ஒரு வழியாக புனித குர்ஆனின் வார்த்தைகளை ஓதுவதை ஆக்கியுள்ளான் , அதாவது புனித குர்ஆனின் வார்த்தைகளை ஓதுவதிலும் எல்லையில்லாத கூலியும், நன்மையும் இருக்கிறது . சிலர் அறியாமையால் புனித குர்ஆனை விளங்காமல் ஓதுவதால் என்ன இலாபம்? என்ன எண்ணுகிறார்கள் , அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை மனிதர்களின் புத்தகங்களைப்போல எண்ணுகிறார்கள் , அதனை விளங்காமல் படித்தல் ஒரு வீண் வேலையாக கருதப்படுகிறது என்பது சரிதான் , ஆனால் குர்ஆனோ அல்லாஹ்வுடைய வேதம், அதன் போதனைகளோ இவ்வுலக, மறுவுலக வெற்றிக்கான வழியாகும் , இருப்பினும் அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரகாசம் இருக்கிறது , அதை வெறுமனே ஓதுவதும் கூட நன்மைக்கும், நலவுக்கும், அபிவிருத்திக்கும் காரணமாகும்.
         ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) கூறினார்கள்
مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ
             எவர் அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரு எழுத்தை படிப்பாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும், இந்த ஒரு நன்மை பத்து நன்மைக்கு சமமாகும், நான் அலிஃப் லாம் மீம் எல்லாம் சேர்த்து ஒரு எழுத்து என கூறமாட்டேன் , மாறாக அலிஃப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்து மீம் ஒரு எழுத்தாகும்.திர்மிதீ
           இந்த
ஹதீஸிலிருந்து தெரிகிறது ஒருவர் வெறும் அலிஃப் லாம் மீம் என்று ஓதினாலேயே அவர்களின் அமல்களின் பட்டோலையில் முப்பது நன்மைகள் கூடிவிடும் . இதே ஹதீஸிலிருந்து மேலும் தெரிய வருவதாவது  இந்த நன்மை பொருள் விளங்காமல் ஓதினாலும் கிடைக்கும் என்பதாகும் .
ஏனெனில் அலிஃப் லாம் மீம் என்ற
வார்த்தையின் பொருள் யாருக்குமே தெரியாது, சரியான பொருளை விளங்குவதற்கான சாத்தியமும் இல்லை , காரணம்  இவைகள் ஹரூஃபே முகத்தஆத்தாகும் , இவை முதஷாபிஹாத்களில் கட்டுப்பட்டவைகளாகும்  அதாவது அவற்றின் பொருள் யாருக்கும் தெரியாது என்ற வகையை சார்ந்ததாகும் , நபி (ஸல்) இந்த எழுத்துக்களை உதாரணம் காட்டி குர்ஆனை ஓதுவதின் நன்மை , அர்த்தம்  விளங்குவதை சார்ந்து இருப்பதில்லை மாறாக விளங்காமல் ஓதினாலும் இந்த நன்மை கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள்.
          வெறும் அலிஃப் லாம் மீம் என்று ஓதினாலே முப்பது
 நன்மைகள் கிடைக்கிறது என்றால் குர்ஆனுடைய ஒரு ருகூவையோ அல்லது ஒரு சூராவையோ ஓதுவதினால் எத்தனை நன்மையும், கூலியும் கிடைக்கும் ?
எனவே ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு நாள் காலையிலும் பிற
வேலைகளில் ஈடுபடுவதற்கு முன் கொஞ்சமாவது புனித குர்ஆனை ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதிகம் ஓத முடியாவிட்டால் கால் ஜுஸ்வு, அந்தளவுக்கும் முடியாவிட்டால் குறைந்தது ஒரு ருகூவாவது ஓதிக்கொண்டால் தினமும் அவருடைய அமல்களின் பட்டோலையில் நூற்றுக்கணக்கான நன்மைகள் கூடிக்கொண்டே இருக்கும்.
         இதே போல ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனுடைய சில சூராக்களை சரளமாக மனனம் செய்து வைத்திருக்க வேண்டும், ஏனெனில் அப்போதுதான் சந்தர்ப்பம் கிடைக்கும்போது குர்ஆனை திறக்காமலேயே ஓதிக்கொள்ள முடியும் .  இவ்வாறு நடந்து கொண்டும், திரிந்து கொண்டும் தன் செயல்களின் பட்டோலையில் நன்மைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கலாம் , ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் , எந்த மனிதரின் உள்ளத்தில்  குர்ஆனின் எந்த பகுதியும் மனனமாக இருக்காதோ அது பாழடைந்த ஒரு வீட்டை போன்றதாகும். (திர்மிதி)


45, சூரா ஃபாத்திஹா, இக்லாஸ் ஓதுவது

          குர்ஆனின் எந்த பாகத்தை ஓதினாலும் நன்மையே நன்மை,  இருப்பினும் சில சூராக்களுக்கு  விசேஷமான சிறப்புகளை நபி (ஸல்) கூறியுள்ளார்கள். சுருக்கமான சூராக்களில் மிக, மிக அதிகமான சிறப்புகள் கொண்ட  சூராக்கள் சூரா ஃபாத்திஹா, சூரா இக்லாஸ் ஆகியவைகளாகும் , பல ஹதீஸ்களில் சூரா இக்லாஸை பாதி குர்ஆனுக்கு சமமாக கூறப்பட்டுள்ளது.
            ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் ஒரு தடவை,  நபி (ஸல்)  அவர்கள் ஸஹாபாக்களிடம் சொன்னார்கள் , எல்லோரும் ஒன்று சேருங்கள், நான் உங்களுக்கு முன்னால் கால் பகுதி குர்ஆனை ஓதிகாட்டப்போகிறேன் ,  சில நபித்தோழர்கள் ஒன்று சேர்ந்ததும் நபி (ஸல்) தனது வீட்டை விட்டு வெளியே  வந்து குல்ஹவல்லாஹ் சூராவை ஓதி காட்டிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்கள், பின்னர் சிறிது நேரத்திற்கு பின் வெளியே வந்து சொன்னார்கள் , நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்  , சூரா இக்லாஸ் குர்ஆனின்  கால் பகுதிக்கு சமமாகும் (முஸ்லிம், திர்மிதி)
            ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அறிவிக்கிறார்கள் , ஒரு முறை நபி (ஸல்) ஸஹாபாக்களிடம் பேசும் போது கூறினார்கள். உங்களில் யாரேனும் ஒரே இரவில் கால் பகுதி குர்ஆனை ஒத இயலாதா? ஸஹாபாக்கள், ஒருவர் ஒரே இரவில் கால் பகுதி குர்ஆனை எவ்வாறு ஓத இயலும்? என கேள்வி கேட்க நபியவர்கள்  குல்ஹவல்லாஹ் கால் பகுதி குர்ஆனுக்கு சமமாகும் என பதிலளித்தார்கள்  (முஸ்லிம்)
          இதனாலேயே பெரியார்களின் வழமை , மரணித்தவர்களுக்கு நன்மையை எத்திவைக்க மூன்று முறை சூரா இக்லாஸை ஓதி அதன் நன்மையை மரணித்தவர்களுக்கு எத்திவைப்பதாக இருந்து வருகிறது .


46, நல்ல முறையில் ஒழு செய்தல்

                   ஒழுவை நிம்மதியாக , சுன்னத்தான முறையில் ஒழுக்கங்களை பேணி நிறைவேற்றுவதும் மிக சிறப்பிற்குறிய அமலாகும், அதற்கு ஹதீஸ்களில் ஏராளமான நன்மைகளும், கூலிகளும் வாக்களிக்கப்பட்டுள்ளன. ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ
              எவர் ஒழு செய்வாரோ,  அந்த ஒழுவை நல்ல முறையில்  செய்வாரோ அவருடைய உடலிருந்து பாவங்கள் வெளியேறி  விடுகின்றன எந்த அளவுக்கென்றால் நகங்களின் அடியிலிருந்து கூட  பாவங்கள் உதிர்ந்துவிடுகின்றன.
              இன்னொரு ஹதீஸில் , ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள்  ஸஹாபாக்களிடம் கேட்டார்கள் , எந்த செயல்களினால் அல்லாஹத்தஆலா பாவங்களை அழிக்கிறான், அந்தஸ்துகளை உயர்த்துகிறான் என்பதை உங்களுக்கு கூறட்டுமா ? ஸஹாபாக்கள் சொன்னார்கள், அல்லாஹ்வின் தூதரே , கண்டிப்பாக கூறுங்கள் , உள்ளம் விரும்பாதபோதும் ஒழுவை பரிபூரணமாக செய்தல், பள்ளியின் பால் அதிக காலடி எடுத்து வைத்து செல்லுதல், ஒரு தொழுகைக்குப்பின் மற்றொரு தொழுகையை எதிர்பார்த்தல், இந்த அமல்களெல்லாம் ஜிஹாதுடைய சிறப்பை கொண்டுள்ளதாகும்  (முஸ்லிம், திர்மிதி)
            அதாவது குளிர்காலத்தின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஒழு செய்வது சிரமமாக தெரியும்போது ஒழுவை பரிபூரணமாக நிறைவேற்றுவதின் நன்மை ஜிஹாதிலே ஏதேனும் எல்லையை பாதுகாப்பதற்கான நன்மையை போன்றதாகும் , ஒழுவை பரிபூரணமாக நிறைவேற்றுவதின் பொருள் சுன்னத்களையும், ஒழுக்கங்களையும் பேணி ஒழு செய்தல் என்பதாகும் , எனவே ஒழு செய்யும்போது இந்த அனைத்து ஒழுக்கங்களையும் பேணவேண்டும் , மேலும் ஒழுவுடைய சரியான முறையை நன்றாக கற்று அதன் படி அமல் செய்ய வேண்டும், இதனால் அமல்களின் பட்டோலையில் நன்மைகள் அதிகரிக்கும்.


47, மிஸ்வாக் செய்தல்

               நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்வதற்கும் அதிகமான சிறப்புகளை கூறியுள்ளார்கள், ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்
السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبّ
               மிஸ்வாக் செய்வது வாயை சுத்தப்படுத்துகிறது , இறைவனின் திருப்தியை தேடித்தருகிறது.
             ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
فَضْلُ الصَّلَاةِ بِالسِّوَاكِ، عَلَى الصَّلَاةِ بِغَيْرِ سِوَاكٍ، سَبْعِينَ ضِعْفًا
            மிஸ்வாக் செய்து தொழும் தொழுகை , மிஸ்வாக் செய்யாமல் தொழும் தொழுகையை விட எழுபது மடங்கு சிறப்பு வாய்ந்ததாகும்.
 ஹாகிம் , அஹ்மது
            மிஸ்வாக்வுடைய சிறப்பு பற்றி எண்ணிலடங்கா ஹதீஸ்கள் வந்துள்ளன , இது நபியவர்களுக்கு மிகவும் பிரியமான சுன்னத்களில் உள்ளதாகும் , அதில் இவ்வுலக மறுஉலக நன்மைகள் இருக்கின்றன , இதற்கு  பெரிய சிரமமோ, கஷ்டமோ, செலவோ தேவைபடாது , எனவே இதன் மூலம் மனிதன் மிக எளிதாக தன் நன்மைகளை அதிகரித்துக்கொள்ளலாம்.


48, ஒழுவுக்குப் பின் திக்ர்

               ஹஜ்ரத் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் , எவர் நல்ல முறையில் ஒழு செய்து பின்னர் இந்த வார்த்தைகளை கூறுவாரோ
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
                    அவருக்காக
சுவனத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும் ,   அவர் விரும்பிய வாசல் வழியாக  சுவனத்தில் நுழைந்துகொள்ளலாம் , முஸ்லிம் ,
         அபூ தாவூதுடைய அறிவிப்பில் இந்த கலிமாக்களை கூறும்போது வானத்தை நோக்கி பார்க்கவேண்டும் என்றும்  திர்மிதிவுடைய அறிவிப்பில் இவ்வார்த்தைகளுடன்
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
என்பதையும் சேர்த்து கூற வேண்டும் என வந்துள்ளது.


49, ஒழுவுடைய காணிக்கை

             எந்த நோக்கத்திற்காக ஒழு செய்த போதிலும் உடனடியாக இரண்டு ரக்அத் ஒழுவுடைய காணிக்கை என்ற நிய்யத்துடன் தொழுவது மிப்பெரிய சிறப்பு வாய்ந்த அமலாகும் , ஹஜ்ரத் உக்பா (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள் , எவர் ஒழு செய்வாரோ,  அந்த ஒழுவை நல்ல முறையில் செய்வாரோ பின்னர் முகமும், உள்ளமும் அல்லாஹ்வை முன்னோக்கிய நிலையில் இரண்டு ரக்அத் தொழுவாரோ அவருக்காக சுவனம் உறுதியாகிவிடும் . (முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ)
            ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) ஹஜ்ரத் பிலால் (ரலி) யிடம் கேட்டார்கள், உங்களுக்கு மிக, மிக அதிகமான நன்மையை தரும் என்ற நம்பிக்கை உள்ள என்ன அமலை நீங்கள் செய்து வருகிறீர்கள் அதை கூறுங்கள் , ஏனெனில் நான்  மிஃராஜின் போது சுவனத்தில் எனக்கு முன்னதாக உங்களின் காலடியோசையை கேட்டேன் , ஹஜ்ரத் பிலால் (ரலி) கூறினார்கள் , மிக அதிகமாக அல்லாஹ்வுடைய கிருபையை ஆதரவு வைத்து நான் செய்து வரும் அமல் நான் இரவிலோ, பகலிலோ  எப்போது ஒழு செய்தாலும் அந்த ஒழுவைக்கொண்டு என்னால் முடிந்த அளவு  கண்டிப்பாக தொழுவேன் (புஹாரி, முஸ்லிம்)
           ஒழுவுக்கு பின் இரண்டு ரக்அத் தொழுவதற்கு இரண்டு மூன்று நிமிடங்கள்தான்  செலவாகும், ஆனால் இந்த இரண்டு மூன்று நிமிடத்தில் செய்யக்கூடிய அமலுடைய ஸவாப் எவ்வளவு அதிகம் என்பதை பாருங்கள் , எனவே கண்டிப்பாக இதை பேணவேண்டும், ஒழுவிற்குப்பின் உடனடியாக ஃபர்ளுதொழுகையின் நேரமாக இருந்தாலும் கூட ரொம்ப சிறந்தது ஒழுவுடைய காணிக்கை என்ற நிய்யத்தில்  இரண்டு ரக்அத் முதலில் தொழவேண்டும் , ஆனால் அதற்கு நேரமில்லையானால் ஃபர்ளு தொழுகை அல்லது சுன்னத் தொழுகைகளிலேயே ஒழுவுடைய காணிக்கையையும் சேர்த்து நிய்யத் செய்தால் இன்ஷா அல்லாஹ் அப்போதும் கூட ஒழுவுடைய காணிக்கையின் நன்மை கிடைத்துவிடும்.


50, பள்ளியின் காணிக்கை

            இதே போல யாரேனும், ஒரு பள்ளியில் நுழைந்தால் பள்ளியின் காணிக்கை என்ற நிய்யத்தில் இரண்டு ரக்அத் தொழவேண்டும் , நபி (ஸல்) கூறினார்கள் , உங்களில் யாரேனும் பள்ளிக்கு வந்தால் இரண்டு ரக்அத் தொழுது கொள்ளவும். (திர்மிதி)
            இங்கேயும் பள்ளியின் காணிக்கை என்ற நிய்யத்தில் தனியாக இரண்டு ரக்அத் தொழுவதுதான் முறை , இருப்பினும் அது  ஃபர்ளு அல்லது சுன்னத்துடைய நேரமாக இருந்து , அதே ஃபர்ள் அல்லது சுன்னத் தொழுகையுடன் சேர்த்து  பள்ளியின் காணிக்கையையும் நிய்யத் வைத்துக்கொண்டால் இன்ஷா அல்லாஹ் அந்த நிய்யத்தின் பரக்கத்தினால் மனிதன் பள்ளியின் காணிக்கையுடைய நன்மையிலிருந்தும் அவர் பாக்கியமற்று போகமாட்டார் என்பதே அல்லாஹ்வின் கருணையிலிருந்து நாம் ஆதரவு வைக்கும்  விஷயமாகும் .
           பள்ளி காணிக்கை தொழுவதின் சரியான முறை பள்ளிக்கு சென்று அமர்வதற்கு முன்னரே இந்த ரக்அத்களை தொழவேண்டும் என்பதுதான் , இருப்பினும் ஒருவர் தொழாமல் உட்கார்ந்து விட்டாலும் கூட மீண்டும் எழுந்து அவர் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுவது கூடும் .
        தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுவதற்கான சந்தர்ப்பம் இல்லாத அளவுக்கு நேரம் சுருக்கமாக இருந்தால் குறைந்த பட்சம்

سُبْحَانَ اللَّهُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيُّ الْعَظِيمُ
 என்ற கலிமாவை ஓதிக்கொள்ளலாம், அதுமட்டுமின்றி எவ்வளவு நேரம்  பள்ளியில் அமர்ந்திருப்போமோ தொடர்ந்து இக்கலிமாக்களை ஓதிக்கொண்டேயிருக்க வேண்டும் . ஹதீஸிலே இதற்கு அதிகமான சிறப்புகள் கூறப்பட்டுள்ளன , அதை ஓதுவதை சுவனத்தின் பழத்தை சாப்பிடுவதாக கூறப்பட்டுள்ளது.


51, இஃதிகாப்வுடைய நிய்யத்

             எப்போது பள்ளிக்கு செல்ல நேரிட்டாலும் அது தொழுகைக்காக செல்வதாக இருந்தாலும் சரி  ,  அல்லது வேறு எந்த வேலைக்காக இருந்தாலும் சரி  , நான் பள்ளியில் எவ்வளவு நேரம் இருப்பேனோ  அது வரை இஃதிகாப் இருப்பதாக நிய்யத் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் இன்ஷா அல்லாஹ் அந்த நிய்யத்வுடைய பரக்கத்தினால் நஃபிலான இஃதிகாபுடைய  நன்மையும் கிடைத்துவிடும்

.
52, முதல் வரிசையில் தொழுதல்

            தனித்து தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது 27 மடங்கு அதிக சிறப்பை கொண்ட அமலாகும்  , இருப்பினும் ஜமாஅத்துடன் தொழும் போது கூட  முதல் வரிசையில் தொழுதால் அதன் நன்மை மேலும்  அதிகமாகும் , எந்தளவுக்கென்றால் நபி (ஸல்) கூறினார்கள்,
لَوْ تَعْلَمُونَ مَا فِي الصَّفِّ الْمُقَدَّمِ لَكَانَتْ قُرْعَة
முதல் வரிசையில் என்ன சிறப்புண்டு என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் சீட்டு குலுக்கிபோட்டு தேர்ந்தெடுக்கப்படும் நிலை வந்துவிடும். (முஸ்லிம்)
          ஹஜ்ரத் அபூ உமாமா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபியவர்கள் சொன்னார்கள் , அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் முதல் வரிசையிலுள்ளோர் மீது ரஹ்மத் உண்டாவதாக என பிரார்த்திக்கிறார்கள் . (முஸ்னத் அஹ்மத்)
           ஹஜ்ரத் இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி) கூறுகிறார்கள் , நபி (ஸல்) முதல் வரிசையிலுள்ளோருக்காக  மூன்று முறை பாவமன்னிப்பு தேடினார்கள்,  இரண்டாவது அணிக்கு ஒரு முறை பாவமன்னிப்பு கேட்டார்கள்.(இப்னு மாஜா)
          எனவே ஒவ்வொரு தொழுகையையும் முதல் ஸப்பில் தொழ முயற்சிக்க வேண்டும் , எல்லா தொழுகையிலும் அதை பேணமுடியாவிட்டால் சந்தர்ப்பம் கிடைக்கும்போதாவது முதல் ஸப்புடைய சிறப்பை பெறவேண்டுமென்ற சிந்தனை கொள்ள வேண்டும் , இருப்பினும் பிறருக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் முதல் ஸப்பில் விடாப்பிடியாக நுழைவதும் அனுமதியில்லாத செயலாகும் ,  ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள்,
مَنْ تَرَكَ الصَّفَّ الْأَوَّلَ مَخَافَةَ أَنْ يُؤْذِيَ أَحَدًا، أَضْعَفَ اللَّهُ لَهُ أَجْرَ الصَّفِّ الْأَوَّل
             எவர் பிறருக்கு தொந்தரவு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் முதல் ஸப்பை விட்டுவிடுவாரோ அல்லாஹ் அவருக்கு முதல் ஸப்பின் நன்மையை விட இரண்டு மடங்கு நன்மையை தந்து விடுவான். தர்கீப் , தப்ரானி


53, ஸப்பிலுள்ள இடைவெளியை பூர்த்திசெய்தல்

             ஜமாஅத் தொழுகையின் போது ஸப்புகளை நேராக்குவதற்கும், ஸப்புகளிலுள்ள இடைவெளியை பூர்த்திசெய்யவும் வலியுறுத்தி ஹதீஸ்களில் வந்துள்ளது. அதற்கான சிறப்புகளும் கூறப்பட்டுள்ளது , ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள்
مَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ
எவர் ஸப்களிலுள்ள இடைவெளியை பூர்த்தி செய்து ஸப்களை  இணைப்பாரோ அல்லாஹ் அவருக்கு தன்னுடைய நெருக்கத்தை தருவான் . (நஸயீ)
                   ஹஜ்ரத் அபூ ஜுஹைபா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் எவர் ஸப்புடைய
இடைவெளியை பூர்த்திசெய்வாரோ அல்லாஹ் அவருக்கு தன்னுடைய மன்னிப்பை வழங்குகிறான் . (தர்கீப் , பஸ்ஸார்) பொதுவாக இமாமுடைய வலதுபுறம் நிற்பதில் அதிக நன்மை உள்ளது , ஆனால் எல்லோரும் வலது புறம் நின்று இடதுபுறத்தில் காலி இடமிருந்தால் அப்போது இடதுபுறம் நிற்பதற்கு இரு மடங்கு சிறப்புண்டு என ஹதீஸ்களில் வந்துள்ளது. (இப்னு குஸைமா)


54, இஷ்ராக் தொழுகை

                இஷ்ராக் தொழுகை ஒரு உபரியான வணக்கம் , சூரியன் உதயமாகி சிறிது மேலே உயர்ந்ததும் தொழவேண்டிய தொழுகை அது . சூரியன் உதயமாகி சுமார் 12 நிமிடத்திற்குப்பின் தொழலாம் , அது இரண்டு ரக்அத் மட்டும்தான், ஆனால் ஹதீஸ்களில் இந்த தொழுகைக்கு அதிகமான சிறப்புகள் வந்துள்ளன. ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , நபி (ஸல்) கூறினார்கள் எவர் லுஹா (இஷ்ராக்) தொழுகையின் இரண்டு ரக்அத்தை பேணுதலாக தொழுதுவருவாரோ அவருடைய சிறு பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன . அது கடல் நுரையளவுக்கு இருந்தாலும் சரியே. (திர்மிதி, இப்னு மாஜா)
            ஹஜ்ரத் அபூ ஹரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் , ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் சில ஸஹாபாக்களை ஜிஹாதுக்காக அனுப்பி வைத்தார்கள்,  அவர்கள் சீக்கிரமே திரும்பி வந்தார்கள் , அதிகமான கனீமத் பொருளையும் தன்னுடன் கொண்டு வந்திருந்தார்கள் , ஒருவர் மிகவும் ஆச்சரியப்பட்டவராக நபியிடம் சொன்னார், அல்லா ஹ்வின் தூதரே ! நாம் இதற்கு முன்னர் ஒரு படை இவ்வளவு சீக்கிரமாக திரும்பி , இவ்வளவு கனீமத் பொருளை பெற்றுவந்ததாக இந்த படையை விட வேறு படை எதையும் நாம் பார்த்ததில்லையே , நபியவர்கள் சொன்னார்கள் , நான் ஒருவரை பற்றி கூறட்டுமா ? அவர் இப்படையை விட சீக்கிரம் வந்தார், அவர்களை விட அதிக கனீமத் பொருளை எடுத்து வந்தார் , அது யார் தெரியுமா  பிறகு சொன்னார்கள் , எவர் நல்ல முறையில் ஒழு செய்து பள்ளிக்கு வந்து ஃபஜ்ர் தொழுகை தொழுது பின்னர் அதற்கு பின் சூரியன் உதயத்திற்குப்பின்னர் இஷ்ராக் தொழுவாரோ அவர் சீக்கிரம் வந்தார் பிரமாண்டமான கனீமத்பொருளையும் வாங்கிவந்துவிட்டார். ( தர்கீப் , அபூ யஃலா)
         ஹஜ்ரத் அபூதர் கிபாரி (ரலி) வுடைய
அறிவிப்பு  முன்னால் கூறப்பட்டு விட்டது , அதன் கருத்து யாதெனில் உடலில் 360 இணைப்புகள் உள்ளன , அவற்றிலிருந்து ஒவ்வொன்றையும் நரகிலிருந்து விடுவிக்க ஒவ்வொருவரும் தினமும் குறைந்த பட்சம் 360 நன்மைகள் செய்யவேண்டும் , என்று கூறிய நபி, இந்த நோக்கம் நிறைவேறும் நன்மைகளை விளக்கி சொன்னார்கள் , ஒரு முறை சுப்ஹானல்லாஹ் கூறுவது ஒரு நன்மை,  அல்ஹம்து லில்லாஹ் கூறுவது ஒரு நன்மை , லா இலாஹ இல்லல்லாஹ் கூறுவது ஒரு நன்மை , அல்லாஹ் அக்பர் கூறுவது ஒரு நன்மை, யாருக்கேனும் நன்மையை ஏவுவது ஒரு நன்மை , யாரையேனும் தீமையிலிருந்து தடுப்பது ஒரு நன்மை , இந்த நன்மைகள் யாவற்றையும் கூறிவிட்டு நபியவர்கள் சொன்னார்கள்
وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى
         இந்த நன்மைகள் யாவற்றிற்கும்  சேர்த்து  இஷ்ராக்வுடைய நேரத்தில் ஒருவர் தொழும் இரண்டு ரக்அத் தொழுகையே போதுமாகிவிடும். (முஸ்லிம்)
      இதன் பொருள் இந்த  இரு ரக்அத்களும் 360 நன்மைகளுக்கு சமமாகிவிடும் என்பதாகும் , இஷ்ராக்கின் சிறந்த
முறை ஃபஜர் தொழுது விட்டு அதே இடத்தில் அமர்ந்து திக்ர் செய்து கொண்டே இருக்கவேண்டும், சூரிய உதயத்திற்குப்பின் இஷ்ராக் தொழுதுவிட்டு எழவேண்டும், ஹதீஸிலே இதற்கு ஹஜ், உம்ராவுக்கு சமமான நன்மை என சொல்லப்பட்டுள்ளது , இருப்பினும் ஏதேனும் காரணத்தால் இவ்வாறு செய்ய இயலாவிட்டால் வீட்டுக்கு வந்து அல்லது வேறு ஏதேனும்  வேலையில் ஈடுபட்ட பின்னரும் கூட இஷ்ராக் தொழுது கொள்ளலாம்.

No comments:

Post a Comment